செயற்கை நுண்ணறிவான AI-யின் எதிர்கால வளர்ச்சி மற்றும் அது மனிதர்களின் பணிபுரியும் முறையில் ஏற்படுத்தவுள்ள மாற்றங்கள் குறித்து OpenAI நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் (Sam Altman) முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இந்தக் கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
கடந்த ஓராண்டில் AI மற்றும் தொழில்நுட்பத் துறையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக சாம் ஆல்ட்மேன் சுட்டிக்காட்டியுள்ளார்.
மனிதர்கள் கணினிகளுடன் நேரடியாக உரையாடும் நிலை தற்போது உருவாகியுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், இது ஒரு திரைப்படத்திற்குள் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துவதாகவும், அறிவியல் புனைகதை நிஜமாக மாறியதைப் போன்ற தோற்றத்தைத் தருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், சாதாரண உரையாடலுக்கு அப்பாற்பட்டு, கணினிகளைப் பயன்படுத்தும் விதத்தையும், மனிதர்கள் பணிபுரியும் முறையையும் முற்றிலும் மாற்றியமைக்கக்கூடிய “மூன்றாம் கட்டத்திற்குள்” தற்போது நுழைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இணையம் ஆரம்பகாலத்தில் அறிமுகமானபோது மக்கள் அதனை எவ்வாறு படிப்படியாக ஏற்றுக்கொண்டார்களோ, அதேபோன்று தற்போதைய AI வளர்ச்சியையும் மக்கள் இயல்பாக ஏற்றுக்கொண்டு வருவதாக சாம் ஆல்ட்மேன் தெரிவித்துள்ளார்.
மனிதர்களின் பணிபுரியும் பழக்கவழக்கங்களில் இயல்பான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு காலம் தேவைப்படுவதால், இந்த புதிய தொழில்நுட்பத்துடன் பழகுவதற்கும் மாற்றங்களை ஏற்றுக்கொள்வதற்கும் சிறிது காலம் எடுக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
எனினும், இந்த ஆண்டின் இறுதிக்குள் பணிபுரியும் முறையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படக்கூடும் என்றும், மனிதர்கள் வேலை செய்வதற்கு முற்றிலும் புதியதொரு முறை உருவாகும் சாத்தியம் உள்ளதாகவும் சாம் ஆல்ட்மேன் தெரிவித்துள்ளார்.
Latest News
2023 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக வட்டி விகிதங்களை உயர்த்திய அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ்!
Local
17 September 2026
இன்று நள்ளிரவு முதல் தொடருந்து ஊழியர்கள் 48 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பு!
Local
16 September 2026
மட்டக்குளி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு: 12 பேர் மருத்துவமனையில்!
Local
16 September 2026
அதானியைப் பின் தள்ளி ஆசிய செல்வந்தர் பட்டியலில் டிக்டொக் நிறுவுனர் முதலிடம்!
Local
16 September 2026
திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு மருத்துவமனைகளில் புதிய கட்டடங்களுக்கு ஜனாதிபதி அடிக்கல்
Local
16 September 2026
5 ஆவது மகளிர் பிரீமியர் லீக் (WPL): ஏலம் ஒக்டோபரில் - ஜனவரியில் தொடர் ஆரம்பம்!
Local
16 September 2026
கொசோவோ முன்னாள் ஜனாதிபதிக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை!
Local
16 September 2026
மகனுக்காக ஒதுங்கிக்கொண்ட தளபதி: ரசிகர்களுக்காக காத்திருக்கும் சர்ப்ரைஸ் - வெளியான அதிரடி அறிவிப்பு
Local
16 September 2026
டிட்வா சூறாவளியை தொடர்ந்து 30,000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மண்சரிவு அபாயத்தில்!
Local
16 September 2026
செப். 25 முதல் பொல்கொல்ல நீர்த்தேக்கம் வெறுமையாக்கப்படும்: கொத்மலை நீர்மின் உற்பத்தியும் இடைநிறுத்தம்!
Local
16 September 2026