General19 September 2026

இலங்கையின் கிழக்கு மாகாணத்தை மேம்படுத்தும் நோக்கில் வெளிநாட்டு ராஜதந்திரிகளுக்கான சுற்றுலா ஆய்வுப் பயணம்!

கொழும்பில் உள்ள வெளிநாட்டு ராஜதந்திரிகளுக்கான சிறப்பு மூன்று நாள் சுற்றுலா மேம்பாட்டு ஆய்வுப் பயணம் நேற்று ( 18) ஆரம்பமானது.

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சகம் இதனை ஏற்பாடு செய்துள்ளது.

கொழும்பில் இருந்து புறப்பட்ட ராஜதந்திரி குழுவினர், பாசிக்குடாவை சென்றடைந்தனர்.

பாசிக்குடா கடற்கரைப் பகுதியைப் பார்வையிடும் ராஜதந்திரிகள், சிறு மற்றும் நடுத்தர அளவிலான உற்பத்தியாளர்களின் கைவினைப் பொருட்கள் கண்காட்சியிலும் கலந்துகொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த மூன்று நாள் சுற்றுப்பயணத்தின் போது, வெளிநாட்டு ராஜதந்திரிகள், கிழக்கு மாகாண அரசியல் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகளைச் சந்தித்து எதிர்கால முதலீடுகள் மற்றும் பிராந்திய வளர்ச்சி வாய்ப்புகள் குறித்து விவாதிக்க உள்ளனர்.

இரண்டாம் நாள் பயணமான இன்று (19) ஏறாவூர் ஏற்றுமதி செயலாக்க மண்டலம், சேருவில பௌத்த விஹாரை மற்றும் திருகோணமலை கோணேஸ்வரர் இந்துக் கோவில் ஆகியவற்றுக்குப் பிரதிநிதிகள் குழு செல்லவுள்ளது.

மூன்று நாள் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்துகொண்டு ராஜதந்திரிகள் குழு நாளை கொழும்பு திரும்பவுள்ளது
Related recommendation
Hiru TV News | Programmes