General20 September 2026

பாடசாலைகளை நடத்துவது குறித்துத் தீர்மானிக்க மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கு அதிகாரம்!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில், நாளை (21) பாடசாலைகளை நடத்துவது தொடர்பில் தீர்மானிக்கும் முழு அதிகாரம் அந்தந்த மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
 
இதேவேளை, பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் பாதுகாவலர்கள் நிலைமை தொடர்பில் மிகுந்த விழிப்புணர்வுடன் செயற்படுமாறும், வெளியிடப்படும் உத்தியோகபூர்வ அறிவிப்புகளைத் தொடர்ந்து பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes