Entertainment13 August 2026

இரண்டாவது மகனின் பிறந்தநாளுக்கு உருக்கமான பதிவு வெளியிட்ட ஆர்த்தி ரவி!

பிரபல நடிகர் ஜெயம் ரவியின் முன்னாள் மனைவியான ஆர்த்தி ரவி, தனது இரண்டாவது மகனின் பிறந்தநாளை முன்னிட்டு சமூக வலைத்தளப் பக்கத்தில் மிகவும் நெகிழ்ச்சியான மற்றும் உணர்வுபூர்வமான வாழ்த்துப் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

"என்னால் உனக்கு ஒரு பரிசு கொடுக்க முடியும் என்றால், என் கண்களால் உன்னையே நீ பார்க்கும் திறனைத்தான் கொடுப்பேன்.

அப்படிப் பார்த்தால், நான் சிரிக்கவே மறந்துவிட்டேன் என்று நினைத்த நேரத்திலும் என்னைச் சிரிக்க வைத்து, அந்தச் சிறுவனை நீ பார்ப்பாய். உன் சகோதரனுக்கு ஒரு பாறை போல் உறுதியான துணையாக நிற்பதையும், எல்லா சூழ்நிலைகளிலும் அமைதியாக அவன் அருகில் இருப்பதையும் காண்பாய்.

இந்த நன்னாளில் எனக்கு இருக்கும் ஒரே ஒரு ஆசை, உனது குழந்தை பருவத்தை நினைக்கும் பொழுது வாழ்க்கையில் இருந்த கஷ்டங்களையும், உனக்கு கிடைக்காமல் போன விஷயங்களையும் நினைவில் வைத்துக்கொள்ளாதே என்பதே. அதற்கு பதிலாக உனக்கு கிடைத்த எல்லாவற்றையும் நினைவில் வைத்துக்கொள்.

சிரிப்பு, தூக்கமில்லாமல் கழித்த இரவுகள், சின்னச் சின்னப் பயணங்கள், அர்த்தமே இல்லாமல் செய்த அந்த முட்டாள்தனமான சந்தோஷமான விஷயங்கள் ஆகியவற்றை நினைவுகூர்.

எப்பொழுதும் உனக்காக இருந்த ஒரு வீடு, இந்த இரண்டு மகன்களுக்காக மலைகளையே நகர்த்தத் தயாராக இருந்த ஓர் அம்மா... தாமதமான பிறந்தநாள் வாழ்த்துகள் என் ஐயா! நீ என் இரண்டாவது இதயம், ஆனால் அன்பில் ஒருபோதும் இரண்டாவது இல்லை. எப்பொழுதும் என் அதிசயம் நீதான்."

இவ்வாறு ஆர்த்தி ரவி பதிவிட்டுள்ளார். இந்த உருக்கமான வாழ்த்துப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு, ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வாழ்த்துகளைக் குவித்து வருகிறது.
Related recommendation
Hiru TV News | Programmes