Sports13 July 2026

விம்பிள்டன் பட்டத்தைத் தக்கவைத்தார் ஜன்னிக் சின்னர்!

விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், ஜேர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவை வீழ்த்தி இத்தாலியின் ஜன்னிக் சின்னர் மீண்டும் செம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

லண்டனில் நடைபெற்ற விறுவிறுப்பான இறுதிப் போட்டியில், சின்னர் 6-7 (7-9), 7-6 (7-2), 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ஸ்வெரேவை வீழ்த்தினார்.

இதன் மூலம், விம்பிள்டனில் தொடர்ந்து இரண்டாவது முறையாகப் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்ட சின்னர், தனது ஐந்தாவது கிராண்ட் ஸ்லாம் வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

ஸ்வெரேவ் தனது முதல் விம்பிள்டன் இறுதிப் போட்டியில் தைரியமான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், சின்னரின் துல்லியமான சர்வீஸ் மற்றும் தற்காப்பு ஆட்டத்துக்கு முன்னால் அவரால் வெற்றி பெற முடியவில்லை.

இந்த வெற்றியின் மூலம், ஓபன் எரா வரலாற்றில் விம்பிள்டன் பட்டத்தைத் தக்கவைத்த 10ஆவது வீரர் என்ற பெருமையை ஜன்னிக் சின்னர் பெற்றுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes