Sports14 August 2026

இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவதற்கு சிங்கப்பூர் பெண்களை எதிர்கொள்ளும் இலங்கை பெண்கள்!

சிங்கப்பூர் மகளிர் அணிக்கு எதிரான ஆசிய வலைப்பந்து செம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு இலங்கை மகளிர் அணி தயாராக இருப்பதாக தேசிய பயிற்சியாளர் சோமிதா டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.

ஹொங்கொங்கின் காய் டாக் அரங்கில் இன்று நடைபெறவுள்ள அரையிறுதிப் போட்டியில் இலங்கை அணி சிங்கப்பூரை எதிர்கொள்கிறது.

இந்த போட்டியை எதிர்கொள்ள இலங்கை வீராங்கனைகள் சிறந்த மனநிலையில் இருப்பதாக பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

குழுநிலைப் போட்டியில் சிங்கப்பூரிடம் 51 க்கு 62 என்ற கோல் கணக்கில், இலங்கை தோல்வியடைந்திருந்தாலும், அந்த முடிவு இன்றைய அரையிறுதிப் போட்டியில் அணியின் அணுகுமுறையைப் பாதிக்காது என அவர் கூறியுள்ளார்.

இறுதிப் போட்டிக்கு முன்னேற இலங்கை வீராங்கனைகள் உறுதியாக இருப்பதாகவும், அதேவேளை சிங்கப்பூர் அணியை ஒருபோதும் குறைத்து மதிப்பிட முடியாது என்றும் சோமிதா டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை அணி முன்னதாக ஹொங்கொங்குடன் 57க்கு 57 என்ற புள்ளி கணக்கில் சமநிலை பெற்றதுடன், மலேசியாவை 66க்கு 52, இந்தியாவை 100க்கு 34, மாலைத்தீவை 78க்கு 33 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes