Sports15 August 2026

இந்திய அணியை வழிநடத்துவது பெரும் கௌரவம் – 600ஆவது டெஸ்ட் போட்டி சிறப்பான தருணம் என சுப்மன் கில் தெரிவிப்பு

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

இதன் முதலாவது டெஸ்ட் போட்டி இன்று காலை 10 மணிக்கு காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணியின் தலைவர் சுப்மன் கில், முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர், ஆடுகளமும் வானிலையும் சாதகமாக இருப்பதால், துடுப்பாட்டத்திற்கு இது சிறந்த நாளாக அமையும் என நம்பிக்கை வெளியிட்டார்.

மேலும், கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களுடன் களமிறங்கியுள்ளதாகவும், அணியில் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் என ஐந்து பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்திய அணியை வழிநடத்தும் ஒவ்வொரு சந்தர்ப்பமும் தமக்கு மிகப்பெரிய கௌரவம் எனக் குறிப்பிட்ட சுப்மன் கில், இன்றைய போட்டி இந்தியாவின் சுதந்திர தினத்தன்றும், தமது 600ஆவது டெஸ்ட் போட்டியாகவும் அமைந்திருப்பதால் இது தங்களுக்கு மிகவும் சிறப்பான தருணம் எனவும் தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes