வத்தளையில் ரூ.3 கோடிக்கும் அதிக மதிப்புள்ள ஹெரோயினுடன் ஒருவர் கைது!

Wednesday, 08 July 2026 - 8:14

%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B0%E0%AF%82.3+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95+%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81%21
வத்தளை, எந்தரமுல்ல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதலின் போது, 34 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் 2.325 கிலோகிராம் ஹெரோயினுடன் சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட ஹெரோயினின் சந்தை பெறுமதி ரூ.3 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது.