இஸ்ரேலின் தற்போதைய அரசாங்கம் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள ஜெனின் நகருக்கு அருகில் மூடப்பட்டிருந்த 'கதிம்' (Kadim) குடியேற்றத்தை மீண்டும் திறந்துள்ளது.
இதன் மூலம், இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் அங்கிருந்து வெளியேறிய இஸ்ரேலியக் குடியேறிகள் மீண்டும் அந்தப் பகுதியில் குடியேற ஆரம்பித்துள்ளனர்.
கடந்த 2005 ஆம் ஆண்டு இஸ்ரேலிய அரசாங்கத்தால் மூடப்பட்ட கதிம் குடியேற்றம், தற்போது அரசாங்கத்தின் ஆதரவுடன் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
யூத தேசியவாதத்தின் அடிப்படையில், இஸ்ரேலின் நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் மற்றும் பல முக்கிய அமைச்சர்கள் கலந்துகொண்ட நிகழ்வில் இந்தத் குடியேற்றம் அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில்,சர்வதேச சட்டங்களின்படி அனைத்து இஸ்ரேலியக் குடியேற்றங்களும் சட்டவிரோதமானவை என்ற நிலையில், தற்போதைய குடியேற்ற நடவடிக்கையானது அந்தப் பகுதியில் உள்ள பாலஸ்தீன மக்களிடையே அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.








