General16 June 2026

நாட்டின் சில பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை

நாட்டின் சில பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை நிலவக்கூடும் என எதிர்வுக் கூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள இற்றைப்படுத்தப்பட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும்.

அதேநேரம், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பிற்பகல் 02 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எதிர்வுக் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், தென் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, களு, நில்வலா உள்ளிட்ட பிரதான ஆறுகளின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளதாக நீர்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, முன்னதாக வெள்ள அபாயம் விடுக்கப்பட்ட பகுதிகளில் உள்ள ஆறுகளின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளதாக நீர்பாசன திணைக்களத்தின் நதிகள் முகாமைத்துவ பிரிவின் பிரதம பொறியியலாளர் எஸ். ஜெயம் பார்த்தசாரதி தெரிவிக்கின்றார்.
Related recommendation
Hiru TV News | Programmes