வளைகுடாப் பிராந்தியப் பதற்றங்கள் தணிந்து உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை ஸ்திரத்தன்மையடைந்துள்ள நிலையில், அதன் உண்மையான இலாபத்தை உடனடியாக நாட்டு மக்களுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
உலக சந்தையில் எண்ணெய் விலை குறைவடைந்துள்ளது.இந்த அரசாங்கம் போர் தொடங்கிய ஆரம்பத்தில், 35 நாட்களுக்குத் தேவையான எண்ணெய் இருப்பு நம்மிடம் உள்ளதாகக் கூறியது. ஆனால், அடுத்த ஏழே நாட்களுக்குள் எண்ணெய் விலையை உயர்த்தியது.
இதன் மூலம் அவர்கள் ஒரு பெருந்தொகையான மேலதிகப் பணத்தை ஈட்டியிருப்பார்கள். எனவே, தற்போது எண்ணெய் விலை குறைந்திருப்பதால், மார்ச் மாதத்தில் மக்கள் பணமாகச் சேர்த்துக்கொள்ளப்பட்ட அந்தப் பழைய பெருந்தொகைப் பணத்தை மீண்டும் மக்களிடமே வழங்கி, இந்த எண்ணெய் விலையைக் குறைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இதன் மூலம் அவர்கள் ஒரு பெருந்தொகையான மேலதிகப் பணத்தை ஈட்டியிருப்பார்கள். எனவே, தற்போது எண்ணெய் விலை குறைந்திருப்பதால், மார்ச் மாதத்தில் மக்கள் பணமாகச் சேர்த்துக்கொள்ளப்பட்ட அந்தப் பழைய பெருந்தொகைப் பணத்தை மீண்டும் மக்களிடமே வழங்கி, இந்த எண்ணெய் விலையைக் குறைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அதேபோல், எண்ணெய் விலை இதே மட்டத்தில் நீடிப்பதைக் கருத்திற்கொண்டு, மின்சாரக் கட்டண திருத்தம் ஒன்றினை மேற்கொண்டு அது தொடர்பிலும் புதிய தீர்மானம் ஒன்றினை எடுக்குமாறு நாம் அரசாங்கத்திடம் கோருகிறோம்.
ஏனெனில், இந்த அரசாங்கத்தின் நிலக்கரி ஊழல் காரணமாகவும், அதேபோல் டீசல் ஊழல் காரணமாகவும் பெருமளவிலான மக்கள் பணம் வீணடிக்கப்பட்டது.
இப்பொழுதாவது மக்களுக்கு நீதியை நிலைநாட்டும் வகையில், எண்ணெய் விலையைக் குறைத்து, மின்சாரக் கட்டணத்தையும் குறைக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஏனெனில், இந்த அரசாங்கத்தின் நிலக்கரி ஊழல் காரணமாகவும், அதேபோல் டீசல் ஊழல் காரணமாகவும் பெருமளவிலான மக்கள் பணம் வீணடிக்கப்பட்டது.
இப்பொழுதாவது மக்களுக்கு நீதியை நிலைநாட்டும் வகையில், எண்ணெய் விலையைக் குறைத்து, மின்சாரக் கட்டணத்தையும் குறைக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Latest News
338 ரூபாவைத் தாண்டியது அமெரிக்க டொலரின் விற்பனை விலை!
Local
16 June 2026
இலங்கையில் இன்று தங்கவிலை அதிகரிப்பு
Local
16 June 2026
புளுமெண்டல் சங்க உள்ளிட்ட இருவருக்கு 90 நாட்கள் தடுப்புக் காவல் உத்தரவு!
Local
16 June 2026
"வெளியே எழும் விமர்சனங்களை புறந்தள்ளி விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்துங்கள்" - சூரியவன்ஷிக்கு அநுர தென்னகோன் அறிவுரை!
Local
16 June 2026
300 ரூபாய்க்கும் குறைவான விலையில் கொழும்பு துறைமுகத்திற்கு எண்ணெய் கொண்டுவர முடியும்
Local
16 June 2026
நீர் விநியோகத்தடை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு
Local
16 June 2026
நாட்டில் வேகமாகப் பரவும் டெங்கு: அதி அபாய வலயங்கள் 84 ஆக அதிகரிப்பு!
Local
16 June 2026
முஹர்ரம் மாதத்துக்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று
Local
16 June 2026
வித்யா கொலை வழக்கு: மூவரின் மரண தண்டனையை மீண்டும் உறுதி செய்தது யாழ் மேல் நீதிமன்றம்!
Local
16 June 2026
நாட்டின் சில பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை
Local
16 June 2026