General23 June 2026

அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

2026 ஆம் ஆண்டு பொசன் பூரணை போயா தினம் மற்றும் தேசிய பொசன் வாரத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எம்.பி.என்.ஏ. பிரேமரத்ன இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இதன்படி, ஜூன் 29 ஆம் திகதி பொசன் போயா தினத்தை முன்னிட்டு, ஜூன் 28 ஆம் திகதி இரவு மதுபானசாலைகள் மூடப்படும் நேரம் முதல் ஜூன் 30 ஆம் திகதி காலை திறக்கப்படும் நேரம் வரை நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்பட்டிருக்க வேண்டும்.

மேலும், அநுராதபுரத்தை மையமாகக் கொண்ட தேசிய பொசன் வாரத்தை முன்னிட்டு, ஜூன் 26 முதல் ஜூலை 2 வரை பின்வரும் 4 பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள மதுபானசாலைகளும் மூடப்படும்.

இதற்கமைய, இப்பகுதிகளிலுள்ள மதுபானசாலைகள் ஜூன் 25 ஆம் திகதி இரவு முதல் ஜூலை 3 ஆம் திகதி காலை வரை மூடப்பட்டிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவுகளை மீறிச் செயற்படும் மதுபானசாலைகள் குறித்து 1913 என்ற 24 மணி நேர அவசர தொலைபேசி இலக்கத்திற்குத் தகவல் வழங்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மதுவரி திணைக்களத்தின் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர், பிரதி மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் ஏ.ஏ. ரொஷான் பெரேரா தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes