இலங்கை கடற்படையின் ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பல்களின் கடல்சார் தொடர்பு மற்றும் செயல்பாட்டுத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில், அமெரிக்காவினால் சுமார் 4 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அதிநவீன 'ஃப்ளீட் பிரோட்பேண்ட்' (Fleet Broadband) செய்மதித் தொடர்பு கட்டமைப்பு வழங்கப்பட்டுள்ளது.
கொழும்புத் துறைமுகத்தில் உள்ள 'SLNS கஜபாஹு' கப்பலில் நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில்,பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர மற்றும் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் எஸ். போல் கபூர் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
உலகின் பரபரப்பான கடல் வழித்தடங்களில் இலங்கையின் கடல்சார் தொடர்புகளை வலுப்படுத்துவதற்காக இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்த தொழில்நுட்பத்தின் மூலம் கப்பல்களுக்கு இடையேயும், கப்பல்களுக்கும் கரைக்குமிடையேயும் பாதுகாப்பான குரல் மற்றும் தரவு பரிமாற்றங்களை மேற்கொள்ள முடியும்.
அத்துடன், இந்து சமுத்திர பிராந்தியத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ள கப்பல்கள் மற்றும் விமானங்களுடன் கடற்படைத் தலைமையகம் உடனுக்குடன் (Real-time) தொடர்புகளைப் பேணவும் இது வழிவகுக்கும்.
இந்த புதிய வசதி மூலம் கடல்சார் விழிப்புணர்வு மற்றும் பிராந்திய பங்காளிகளுடனான தகவல் பகிர்வு மேம்படும் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் சட்டவிரோத கடல்சார் நடவடிக்கைகளுக்கு எதிராக ஒருங்கிணைந்த முறையில் செயற்படவும், சர்வதேச கடல் வழித்தடங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் முடியும் என பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நிகழ்வில் இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் வர்த்தக அதிகாரி ஜெயின் ஹாவெல் மற்றும் பாதுகாப்பு அமைச்சு, கடற்படை உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
கொழும்புத் துறைமுகத்தில் உள்ள 'SLNS கஜபாஹு' கப்பலில் நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில்,பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர மற்றும் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் எஸ். போல் கபூர் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
உலகின் பரபரப்பான கடல் வழித்தடங்களில் இலங்கையின் கடல்சார் தொடர்புகளை வலுப்படுத்துவதற்காக இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்த தொழில்நுட்பத்தின் மூலம் கப்பல்களுக்கு இடையேயும், கப்பல்களுக்கும் கரைக்குமிடையேயும் பாதுகாப்பான குரல் மற்றும் தரவு பரிமாற்றங்களை மேற்கொள்ள முடியும்.
அத்துடன், இந்து சமுத்திர பிராந்தியத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ள கப்பல்கள் மற்றும் விமானங்களுடன் கடற்படைத் தலைமையகம் உடனுக்குடன் (Real-time) தொடர்புகளைப் பேணவும் இது வழிவகுக்கும்.
இந்த புதிய வசதி மூலம் கடல்சார் விழிப்புணர்வு மற்றும் பிராந்திய பங்காளிகளுடனான தகவல் பகிர்வு மேம்படும் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் சட்டவிரோத கடல்சார் நடவடிக்கைகளுக்கு எதிராக ஒருங்கிணைந்த முறையில் செயற்படவும், சர்வதேச கடல் வழித்தடங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் முடியும் என பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நிகழ்வில் இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் வர்த்தக அதிகாரி ஜெயின் ஹாவெல் மற்றும் பாதுகாப்பு அமைச்சு, கடற்படை உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
Latest News
அமெரிக்கா வழங்கிய 10 உலங்குவானூர்திகள் வான்படையிடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைப்பு
Local
23 June 2026
அமெரிக்காவிடமிருந்து 4 மில்லியன் டொலர் பெறுமதியான செய்மதித் தொடர்பு கட்டமைப்பு!
Local
23 June 2026
சித்துபாத்தியில் இதுவரை 409 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு; பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்
Local
23 June 2026
இறையாண்மைக்கு மதிப்பளிக்க வேண்டும்: ஓமான் மற்றும் ஈரான் கூட்டாக அறிவிப்பு
Local
23 June 2026
ஆட்பதிவு திணைக்கள அதிகாரிகளின் பெயரில் புதிய வட்ஸ்அப் மோசடி!
Local
23 June 2026
சாதனையாளர்களுக்கு தேசிய அங்கீகாரம் - ரோஹித், மாதவனுக்கு பத்ம ஸ்ரீ விருது
Local
23 June 2026
அரச வாகன துஷ்பிரயோகம்: பௌசிக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!
Local
23 June 2026
வாயால் உணவருந்த மறுப்பதே சுரேஷ் சலேயின் பிரச்சினையாகவுள்ளது- அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்
Local
23 June 2026
அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு
Local
23 June 2026
டெல்லியில் கடும் தூசிப்புயல் : சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!
Local
23 June 2026