General25 June 2026

தெல்தெனிய சம்பவம் - கைதான மூவரையும் 48 மணிநேர தடுப்பு காவலில் விசாரணை செய்ய உத்தரவு

கண்டி தெல்தெனிய பகுதியில் இயன்முறை சிகிச்சையாளர் ஒருவர் உடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களையும் 48 மணிநேரம் காவல்துறையினரின் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றம் இன்று (25) உத்தரவிட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து நுவரெலியா காவல்துறை நிலையத்தினரால் முன்னெடுக்கப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, சந்தேகநபர்கள் மூவரும் இன்று நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, நுவரெலியா காவல்துறை குற்றத்தடுப்புப் பிரிவினரால் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட விசேட கோரிக்கைக்கு அமையவே, சந்தேகநபர்களை 48 மணிநேரம் காவல்துறையினரின் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes