General25 June 2026

கையூட்டல் ஊழல் குற்றச்சாட்டில் கைதான சரித் அபேசிங்க உள்ளிட்ட மூவரும் நீதிமன்றில் முன்னிலை!

ரகித ராஜபக்ஷ மற்றும் சரித் அபேசிங்க உள்ளிட்ட மூவர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுத் தலைவரான 'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்னவுடன் தொடர்புடைய விவகாரம் ஒன்றில், 120 மில்லியன் ரூபாய் கையூட்டல் கோரிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கையூட்டல் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று காலை இவர்கள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், மேலதிக சட்ட நடைமுறைகளுக்காக நீதிமன்றத்தில்
முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Related recommendation
Hiru TV News | Programmes