General26 June 2026

மூடப்படும் அபாயத்தில் சூரியசக்தி நிறுவனங்கள்! அரசாங்கத்தின் மந்தமான போக்கை சாடிய தயாசிறி ஜெயசேகர

மூடப்படும் அபாயத்தில் சூரிய சக்தி நிறுவனங்கள் காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று வாய்மூலக்கேள்வி நேரத்திலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களை முன்னெடுப்பதில் அரசாங்கம் மந்தமான போக்கை பின்பற்றுகின்றன. சூரியசக்தித் துறையில் ஈடுபட்டுள்ள பல நிறுவனங்கள் இன்று மூடப்படும் அபாயத்தில் உள்ளன.

சூரியசக்தித் துறையில் ஆயிரக்கணக்கானோர் நேரடியாகவும் மறைமுகமாகவும் பணியாற்றி வந்த நிலையில், அரசாங்கத்தின் கொள்கைகளால் இந்தத் துறை இன்று பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

நாட்டின் 2030 ஆம் ஆண்டிற்கான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகளை அடைவதில் அரசாங்கத்திடம் முறையான திட்டமிடல் இல்லை . அதற்கு தெளிவான வரைபடம் தேவை.

எரிசக்தி நிறுவனங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகைகள் மற்றும் மின்சாரக் கட்டணக் குறைப்பு ஆகியவற்றால் இந்தத் துறை பெரும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.

அதற்கு பதிலளித்த வலுசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க

சூரியசக்தி உற்பத்தியை மாத்திரம் அதிகரிப்பது போதாது . மின்சார விநியோகக் கட்டமைப்பின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவது அவசியமாகும்.

மின் தேவை குறைவாக இருக்கும் காலங்களில் புதுப்பிக்கத்தக்க மின்சாரம் அதிகரிப்பது கட்டமைப்பில் சிக்கலை ஏற்படுத்தும் என்பதால், அதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகின்றோம்.

அத்துடன், நாடாளுதன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர முன்வைத்த தரவுகள் தவறானவை என்று குறிப்பிட்ட அமைச்சர் குறிப்பிட்டார். ஆதாரங்களுடன் கூடிய தரவுகளைப் பேசவேண்டியது அவசியமாகும் என அமைச்சர் தெரிவித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes