நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட மோதல்களுக்குப் பின்னர் அங்கு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்தது.
இந்த நிலையில், நேற்று (08) மீண்டும் சிறிய அளவிலான மோதல் நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும், நிலைமை உடனடியாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று சிறைச்சாலைக்குள் குழப்பமாக நடந்துகொண்ட பெண் கைதிகள் குழுவொன்று, வாரியபொல சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி, சுமார் 700க்கும் மேற்பட்ட கைதிகள் நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
சிறைச்சாலைக்குள் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது, கைதிகள் சிலர் தமது சிறை அறைகளிலிருந்து வெளியே வந்து எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து காவல்துறையினர் தலையிட்டு அவர்களை மீண்டும் சிறை அறைகளுக்குள் அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டனர். இந்தச் சம்பவத்தின் போதே பெண் கைதிகள் சிலர் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதற்கிடையில், இந்த மோதல்களின் போது உயிரிழந்த கைதிகளின் மரண விசாரணை முடிவுகள் திறந்த தீர்ப்பாக அறிவிக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர்களில் இந்தியப் பிரஜை ஒருவரும் உள்ளடங்குவதாகவும், அவரது அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், மரண விசாரணை அறிக்கைகள் இன்று நீர்கொழும்பு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து, கைதிகளின் உறவினர்கள் நேற்று சிறைச்சாலைக்கு முன்பாக ஒன்று கூடியிருந்தனர். அவர்களை அந்த இடத்திலிருந்து வெளியேறுமாறு சிறைச்சாலை அதிகாரிகளும் காவல்துறையினரும் அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Latest News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் பதற்றம்: பெண் கைதிகள் இடமாற்றம்
Local
09 July 2026
டெங்கு பரவல் தீவிரம் - கொழும்பு பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இணையவழியில்
Local
09 July 2026
தங்கம் மற்றும் வெள்ளி விலை மேலும் வீழ்ச்சி!
Local
09 July 2026
இன்று 3 மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை : பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்!
Local
09 July 2026
அமெரிக்கா–ஈரான் பதற்றம் தீவிரம்: உலக சந்தையில் எண்ணெய் விலை மீண்டும் உயர்வு
Local
09 July 2026
ஓய்வூதியம் பெறுவதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்க்க விசேட இணையவழி செயலமர்வு
Local
09 July 2026
பழைய போகம்பரை சிறைச்சாலையை மீண்டும் சிறைச்சாலையாக அறிவித்து வர்த்தமானி வெளியீடு
Local
09 July 2026
அரச உத்தரவா? அல்லது தன்னிச்சையான முடிவா? - வசந்த முதலிகே கேள்வி
Local
09 July 2026
சிறைச்சாலையிலிருந்து கப்பம் கோரப்பட்ட சம்பவம் தொடர்பில் இரு பெண்கள் கைது
Local
09 July 2026
ஈரானின் தாக்குதல் தொடர்ந்தால் நிலைமை மோசமாகும் என ட்ரம்ப் எச்சரிக்கை; கடும் பதிலடி கொடுப்போம் என ஈரான் சூளுரை
Local
09 July 2026