General19 July 2026

அமெரிக்காவை நிலைகுலைய வைக்கும் காலநிலை!

அமெரிக்கா தற்போது ஒரே நேரத்தில் 3 முனைகளில் தீவிர காலநிலை பேரிடர்களை சந்தித்து வருகின்றது.
 
இதனால் அந்த நாட்டின் பல பகுதிகள் ஸ்தம்பித்துள்ளன.

கனடாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயின் புகை அமெரிக்காவின் கிழக்கு மற்றும் மத்திய மேற்கு மாநிலங்களை மூடியுள்ளது.

சிகாகோ உட்பட பல நகரங்களில் காற்றின் தரம் மிகவும் அபாயகரமான நிலையை எட்டியுள்ளதால், சுமார் 10 கோடி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

டெக்சாஸ் மாநிலத்தில் கடந்த 3 நாட்களாகப் பெய்து வரும் வரலாறு காணாத அடைமழையால் 'ஹில் கண்ட்ரி' பகுதியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அதில் இதுவரை இருவர் உயிரிழந்துள்ளனர், நூற்றுக்கணக்கானோர் மீட்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் 15 மாநிலங்களில் 68க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத்தீ கொழுந்துவிட்டு எரிகின்றது.

குறிப்பாக பசுபிக் வடமேல் பகுதியில் மின்னல் தாக்குதலால் 17 புதிய காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

17,400க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

காலநிலை மாற்றத்தின் காரணமாக வளிமண்டலம் வெப்பமடைந்து, மண்ணின் ஈரப்பதத்தை உறிஞ்சிவதால் காட்டுத்தீ ஏற்படுகிறது.

அதே சமயம் அதிக நீராவியை சேமித்து வைத்து திடீர் பெருமழையையும் உருவாக்குவதாக விஞ்ஞானிகள் விளக்குகின்றனர்.

இந்த "கூட்டுப் பேரிடர்கள்" சாதாரண பேரிடர்களை விட பல மடங்கு ஆபத்தானவை என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes