செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய 2 செயற்கைக்கோள்கள் உட்பட மொத்தம் 5 செயற்கைக்கோள்களை, ‘லிஜியான்-1 வை15’ (Lijian-1 Y15) கேரியர் ரொக்கெட் (Rocket) மூலம் சீனா வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீனாவின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள தோங்பெங் வர்த்தக விண்வெளி மையத்திலிருந்து நேற்று இந்த ரொக்கெட்டுக்கள் செலுத்தப்பட்டுள்ள அதேவேளை செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை விண்வெளி ஆராய்ச்சிக்கு விரிவாக்கும் நோக்கிலேயே இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.
இதில் 'ஜிதியான் ஸ்டார் ஏ-04' (Jitian Star A-04) என்ற செயற்கைக்கோள், தன்னியக்க AI மாதிரிகள் மூலம் விண்வெளியில் தன் செயல்பாடுகளைத் தானே நிர்வகிக்கும் திறன் கொண்டதாகும்.
அதேபோல் 'செங்குவாங்-2 03' (Xiguang-2 03) என்ற செயற்கைக்கோளில் 3 AI வானிலை மாதிரிகள் பொருத்தப்பட்டுள்ளன. இது திடீர் சூறாவளி மற்றும் பலத்த மழை போன்ற வானிலை மாற்றங்களை உடனுக்குடன் துல்லியமாகக் கணிக்க உதவும்.
வழக்கமான வானிலை செயற்கைக்கோள்கள் தரவுகளைப் பூமிக்கு அனுப்ப 90 நிமிடங்கள் வரை எடுக்கும் நிலையில், இந்த AI செயற்கைக்கோள்கள் விண்வெளியிலேயே தரவுகளை உடனடியாகப் பகுப்பாய்வு செய்யும்.
இந்த இரண்டு செயற்கைக்கோள்களும் ‘திரீ-பாடி கம்ப்யூட்டிங் கான்ஸ்டலேஷன்’ (Three-Body Computing Constellation) திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
இத்திட்டத்தின் கீழ் 2027ஆம் ஆண்டிற்குள் 100 AI செயற்கைக்கோள்களை விண்வெளியில் நிலைநிறுத்த சீனா திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சீனாவின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள தோங்பெங் வர்த்தக விண்வெளி மையத்திலிருந்து நேற்று இந்த ரொக்கெட்டுக்கள் செலுத்தப்பட்டுள்ள அதேவேளை செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை விண்வெளி ஆராய்ச்சிக்கு விரிவாக்கும் நோக்கிலேயே இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.
இதில் 'ஜிதியான் ஸ்டார் ஏ-04' (Jitian Star A-04) என்ற செயற்கைக்கோள், தன்னியக்க AI மாதிரிகள் மூலம் விண்வெளியில் தன் செயல்பாடுகளைத் தானே நிர்வகிக்கும் திறன் கொண்டதாகும்.
அதேபோல் 'செங்குவாங்-2 03' (Xiguang-2 03) என்ற செயற்கைக்கோளில் 3 AI வானிலை மாதிரிகள் பொருத்தப்பட்டுள்ளன. இது திடீர் சூறாவளி மற்றும் பலத்த மழை போன்ற வானிலை மாற்றங்களை உடனுக்குடன் துல்லியமாகக் கணிக்க உதவும்.
வழக்கமான வானிலை செயற்கைக்கோள்கள் தரவுகளைப் பூமிக்கு அனுப்ப 90 நிமிடங்கள் வரை எடுக்கும் நிலையில், இந்த AI செயற்கைக்கோள்கள் விண்வெளியிலேயே தரவுகளை உடனடியாகப் பகுப்பாய்வு செய்யும்.
இந்த இரண்டு செயற்கைக்கோள்களும் ‘திரீ-பாடி கம்ப்யூட்டிங் கான்ஸ்டலேஷன்’ (Three-Body Computing Constellation) திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
இத்திட்டத்தின் கீழ் 2027ஆம் ஆண்டிற்குள் 100 AI செயற்கைக்கோள்களை விண்வெளியில் நிலைநிறுத்த சீனா திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Latest News
ஜஃப்னா கிங்ஸ் அணியுடனான ஒப்பந்தம் ரத்து: ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவிப்பு!
Local
25 July 2026
ரஷ்யாவுக்கு இராணுவப் பொருட்களை கொண்டு சென்ற கப்பல்கள் மீது யுக்ரேன் தாக்குதல்!
Local
25 July 2026
6 பவுண் தங்க நகைக்காகப் பெண்ணின் உயிரைப் பறித்துவிட்டுத் திரைப்படம் பார்க்கச் சென்ற இளம் தம்பதி கைது!
Local
25 July 2026
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடன் கூடிய செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பியது சீனா!
Local
25 July 2026
அமெரிக்காவில் வீடொன்றில் தீப்பரவல்: 6 சிறுவர்கள் உட்பட 8 பேர் உடலங்களாக மீட்பு!
Local
25 July 2026
தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
Local
25 July 2026
நிலவில் 250க்கும் மேற்பட்ட அதிர்வுகள் - இஸ்ரோ வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
Local
25 July 2026
ஜனாதிபதி சட்டத்தரணிகள் நியமன வழிகாட்டல்களில் திருத்தம்: அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!
Local
25 July 2026
லண்டன் விடுதியில் சவுதி இளவரசர் மரணம்: எட்டு மாதங்களுக்குப் பின்னர் வெளியான திடுக்கிடும் தகவல்கள்
Local
25 July 2026
24 மணி நேரத்தில் 303 மில்லியன் பார்வைகள் - இன்ஸ்டாகிராமில் பிரதமர் மோடி புதிய சாதனை
Local
25 July 2026