ஊழல் தடுப்பு மற்றும் ஒழுக்கக் கட்டுப்பாட்டு விதிகளை மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, ஜஃப்னா கிங்ஸ் அணியுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளதாக லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் நிகழ்வு உரிமையாளரான 'இன்னோவேட்டிவ் புரொடக்ஷன் குரூப்' (IPG) நிறுவனம், ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு அறிவித்துள்ளது.
உத்தியோகபூர்வ அறிக்கையொன்றை வெளியிட்டு, ஸ்ரீலங்கா கிரிக்கெட் இதனை தெரிவித்துள்ளது.
அதன்படி, லங்கா ப்ரீமியர் லீக் நிகழ்வு உரிமை ஒப்பந்தத்துக்கு இணங்க, ஜஃப்னா கிங்ஸ் அணியின் அனைத்துப் பொறுப்புகளையும் IPG நிறுவனம் பொறுப்பேற்றுக்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் வீரர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகைகளைச் செலுத்துதல் மற்றும் அணியின் ஏனைய அனைத்து ஒப்பந்தக் கடமைகளையும் நிறைவேற்றுதல் ஆகியன அடங்கும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, லங்கா பிரீமியர் லீக் தொடரின் நேர்மையைப் பேணிப் பாதுகாப்பதில் தாங்கள் உறுதியுடன் இருப்பதை ஸ்ரீலங்கா கிரிக்கெட் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
ஊழல் மற்றும் விளையாட்டின் நேர்மைக்குப் பாதகத்தை ஏற்படுத்தும் அல்லது ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு நடத்தைக்கும் எதிராக எவ்வித சகிப்புத்தன்மையுமற்ற கொள்கையை ஸ்ரீலங்கா கிரிக்கெட் பின்பற்றி வருகின்றது.
லங்கா பிரீமியர் லீக் தொடர் முழுவதும் உயர்மட்ட நிர்வாகம், வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மை பேணப்படுவதை உறுதிசெய்ய அனைத்துப் பங்குதாரர்களுடனும் இணைந்து தொடர்ந்து பணியாற்றவுள்ளதாகவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
உத்தியோகபூர்வ அறிக்கையொன்றை வெளியிட்டு, ஸ்ரீலங்கா கிரிக்கெட் இதனை தெரிவித்துள்ளது.
அதன்படி, லங்கா ப்ரீமியர் லீக் நிகழ்வு உரிமை ஒப்பந்தத்துக்கு இணங்க, ஜஃப்னா கிங்ஸ் அணியின் அனைத்துப் பொறுப்புகளையும் IPG நிறுவனம் பொறுப்பேற்றுக்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் வீரர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகைகளைச் செலுத்துதல் மற்றும் அணியின் ஏனைய அனைத்து ஒப்பந்தக் கடமைகளையும் நிறைவேற்றுதல் ஆகியன அடங்கும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, லங்கா பிரீமியர் லீக் தொடரின் நேர்மையைப் பேணிப் பாதுகாப்பதில் தாங்கள் உறுதியுடன் இருப்பதை ஸ்ரீலங்கா கிரிக்கெட் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
ஊழல் மற்றும் விளையாட்டின் நேர்மைக்குப் பாதகத்தை ஏற்படுத்தும் அல்லது ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு நடத்தைக்கும் எதிராக எவ்வித சகிப்புத்தன்மையுமற்ற கொள்கையை ஸ்ரீலங்கா கிரிக்கெட் பின்பற்றி வருகின்றது.
லங்கா பிரீமியர் லீக் தொடர் முழுவதும் உயர்மட்ட நிர்வாகம், வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மை பேணப்படுவதை உறுதிசெய்ய அனைத்துப் பங்குதாரர்களுடனும் இணைந்து தொடர்ந்து பணியாற்றவுள்ளதாகவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
Latest News
பண்டாரகம பகுதியில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை
Local
27 July 2026
2036-க்குள் பணத்தின் தேவை குறையும்? – ஈலோன் மஸ்கின் கணிப்பு
Local
27 July 2026
அமெரிக்காவில் உணவுத் திருவிழாவில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி - குழந்தை உட்பட 5 பேர் காயம்
Local
27 July 2026
பயணிகள் பேருந்துகளை 5,000 கிலோமீற்றருக்கு ஒருமுறை ஆய்வு செய்ய நடவடிக்கை
Local
27 July 2026
4 நாட்களில் 200 கோடி வசூலைத் தாண்டிய 'ஜனநாயகன்'
Local
27 July 2026
நாளை முதல் வானிலையில் திடீர் மாற்றம்: எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்!
Local
27 July 2026
அமெரிக்கா - ஈரான் தாக்குதல்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி
Local
27 July 2026
கரப்பான்பூச்சிகளின் அடுத்த திட்டம் தயாராகிறது?
Local
27 July 2026
கிழக்கு உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு 'எச்சரிக்கை' மட்டத்திற்கு உயரும் வெப்பநிலை: வளிமண்டலவியல் திணைக்களம் தகவல்!
Local
27 July 2026
இலங்கை போக்குவரத்து சபைக்கு 600 பேருந்துகள்: ஆட்சேபிக்கும் கெமுனு
Local
27 July 2026