கடந்த வாரத்தில் மொரோக்கோவிலிருந்து ஸ்பெயினின் வட ஆப்பிரிக்கப் பகுதியான தியூட்டாவிற்குள் நூற்றுக்கணக்கான குடியேறுபவர்கள் நுழைந்துள்ளதாக அந்தப் பகுதியின் தலைவர் ஜுவான் ஜெசூர் விவாஸ் (Juan Jesús Vivas) தெரிவித்துள்ளார்.
இந்த வருகை வளங்களை மிகைப்படுத்துவதாகக் (overwhelm) கூறி, ஸ்பெயின் அரசாங்கம் உடனடியாகத் தலையிட அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், இது தொடர்பாக ஸ்பெயின் உள்துறை அமைச்சர் பெர்னாண்டோ கிராண்டே-மார்த்தாஸ்கா வெள்ளிக்கிழமை அந்தப் பகுதிக்குச் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த இரண்டு வாரங்களில் 1,500-க்கும் மேற்பட்டோர் (முக்கியமாக இளம் மொரோக்கோ குடியேறுபவர்கள்) தியூட்டாவை அடைந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தியூட்டாவில் உள்ள தனியாக வந்த சிறுவர்கள் வரவேற்பு மையங்கள் கொள்ளளவை விட பல மடங்கு அதிகமாக இயங்குவதாகவும், இது ஒரு மனிதநேய மற்றும் பாதுகாப்பு நெருக்கடி என்றும் விவாஸ் எச்சரித்துள்ளார்.
இந்தத் திடீர் அதிகரிப்பு மே 2021-ல் நிகழ்ந்த நிகழ்வுகளை நினைவூட்டுவதாக உள்ள நிலையில், அப்போது சில நாட்களில் சுமார் 8,000 பேர் தியூட்டாவில் நுழைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Latest News
பாகிஸ்தானை வீழ்த்தி சாதனை படைக்குமா இலங்கை மகளிர் அணி?
Local
31 July 2026
அதிகரிக்கும் வெப்பநிலைக்கு மத்தியில், உடற்பயிற்சி குறைவதால் நீண்டகால ஆரோக்கியத்திற்கு ஆபத்து – ஆய்வாளர்கள் எச்சரிக்கை
Local
31 July 2026
பீர் உற்பத்திக்கு அரிசி, சீனியா? தடுக்கக்கோரும் மனுவின் மீது நீதிமன்றின் உத்தரவு
Local
31 July 2026
நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சிக்கு வாய்ப்பு
Local
31 July 2026
காஸா ஆயுதக் களைவு ஒப்பந்தம்: டொனால்ட் டிரம்பின் முக்கிய அறிவிப்பு
Local
31 July 2026
பாகிஸ்தானில், நிலக்கரி சுரங்க விபத்து: 11 பேர் பலி
Local
31 July 2026
கெஷ்ம் மரணங்களுக்கு அமெரிக்கா, விலை செலுத்திவேண்டியிருக்கும் என்று ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் எச்சரித்துள்ளார்!
Local
31 July 2026
போலந்து வான்வெளிக்குள் ரஷ்ய ஏவுகணை: விரைந்தது நேட்டோ
Local
31 July 2026
மூன்று முக்கிய கடல் வழிகளில் ஏற்பட்ட தடையால் உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்கு ஆபத்து
Local
31 July 2026
ஸ்பெயினின் தியூட்டா பகுதிக்குள் குடியேறுபவர்கள் பெருமளவு வருகை: மனிதநேய மற்றும் பாதுகாப்பு நெருக்கடி என தலைவர் எச்சரிக்கை!
Local
31 July 2026