காலாவதியான மருத்துவப் பொருட்கள் மற்றும் இரசாயனங்களைப் பயன்படுத்தியமை, சேமித்து வைத்திருந்தமை மற்றும் இரத்தப் பரிசோதனைக்கு நோயாளிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
2026 ஜூலை 24 அன்று நடத்தப்பட்ட சிறப்புச் சோதனையைத் தொடர்ந்து, நுகர்வோர் விவகார அதிகாரசபை கேகாலை நீதிவான் நீதிமன்றத்தில் இந்த மருத்துவமனைக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தது.
நுகர்வோர் அதிகாரசபையின் சோதனையின்போது, முழுமையான இரத்தப் பரிசோதனைக்கான கட்டுப்பாட்டு விலை 400 ரூபாயாக இருக்கும் நிலையில், குறித்த மருத்துவமனை 500 ரூபாயை வசூலித்தமை கண்டறியப்பட்டது.
அத்துடன் மருத்துவமனை ஆய்வகத்தில் காலாவதியான 20 ர்ஊஏ சுயினை வுநளவ ஊயளளநவவநள பொதிகள் மற்றும் ; சிஸ்டம் கிளீனிங் சொல்யூஷன் (System Cleaning Solution), திராவக சொல்யூஷன் (Acid Solution) உள்ளிட்ட மருத்துவச் செயல்முறை அமைப்பு பகுப்பாய்வாளர்கள் பயன்படுத்தும் காலாவதியான இரசாயனங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்ததையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதற்கிடையில், மருத்துவமனையின் மருந்தகத்தில் காலாவதியான 23 UNOLOK ஒற்றைப் பயன்பாட்டு ஊசிகள் (Single-use u;ypodermic Needles) விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன.
குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழக்கு கேகாலை நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மருத்துவமனை நிர்வாகம் மூன்று குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டது.
இதனைத் தொடர்ந்து, மருத்துவமனை நிர்வாகத்திற்கு நீதிவான் 520,000 ரூபாய் அபராதம் விதித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், காலாவதியான மருந்துகள், இரசாயனங்கள் அல்லது மருத்துவ உபகரணங்களைப் பயன்படுத்தும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட கட்டணங்களை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் அல்லது ஆய்வகங்கள் குறித்து தகவல் தெரிவிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
இத்தகைய தகவல்களை அலுவலக நேரங்களில் 1977 என்ற எண்ணுக்கு அழைப்பதன் மூலம் தமது அதிகாரசபைக்குத் தெரிவிக்கலாம் என்றும் நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது.
Latest News
நாட்டாமை குடும்பம்" பச்சை குத்தினால் என்னை நேரடியாகச் சந்திக்கலாம்: சரத்குமார்
Local
10 August 2026
சுகயீன விடுமுறையை அறிவித்து கிராம உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்
Local
10 August 2026
பிற்பகல் 2 மணிக்குப்பின்னர் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும்
Local
10 August 2026
க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்
Local
10 August 2026
உலகின் மிக முக்கிய குற்றவாளி கைது. நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
Local
10 August 2026
ரங்கன ஹேரத்திற்குப் பிறகு இலங்கையின் சுழற்பந்து வீச்சு பலவீனமடைந்துள்ளது: ரவிச்சந்திரன் அஸ்வின்
Local
10 August 2026
தங்க ராணிகளின் சமர் ( Battle of Golden Queens) முரண்பாட்டுடன் நிறைவு: விருது வழங்கும் நிகழ்வை புறக்கணித்த கல்லூரி
Local
10 August 2026
தொழில் நிமித்தப் பயணக் கொடுப்பனவு உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கிராம அலுவலகர்கள் பணிப்புறக்கணிப்பு
Local
10 August 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் ஆகஸ்ட் 18 இல் சமர்ப்பிப்பு!
Local
10 August 2026
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகளுடன் அரசாங்கக் குழு சந்திப்பு
Local
10 August 2026