International10 August 2026

உலகின் மிக முக்கிய குற்றவாளி கைது. நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

உலகின் மிக முக்கிய தேடப்படும் குற்றவாளிகளில் ஒருவரும், சர்வதேசக் குற்றக்குழுவின் தலைவருமாகக் கருதப்படும் டேனியல் கினஹான் (Daniel Kinahan), துபாயில் இருந்து அயர்லாந்துக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில், அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

2015 அக்டோபர் 18 முதல் 2017 ஏப்ரல் 06 வரையிலான காலப்பகுதியில் குற்றவியல் அமைப்பொன்றின் நடவடிக்கைகளை வழிநடத்தியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

49 வயதான கினஹானை ஏற்றி வந்த அயர்லாந்து அரசாங்கத்திற்குச் சொந்தமான வானூர்தி டப்ளினை சென்றடைந்ததும், உடனடியாகக் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சிறப்புச் குற்றவியல் நீதிமன்றத்தில் இடம்பெற்ற 13 நிமிட விசாரணையைத் தொடர்ந்து, அவரை அக்டோபர் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உலகளவில் பல தொன் எடையுள்ள போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களை கடத்தியமை, 12 க்கும் மேற்பட்ட பாதாள உலகக் கொலைகளுடன் தொடர்புடையமை போன்ற குற்றச்சாட்டுகள் கினஹான் மீது சுமத்தப்பட்டுள்ளன.

அத்துடன், உலகின் மிகவும் ஆபத்தான குற்றவியல் அமைப்புகளில் ஒன்றாக டேனியலின் குற்றக்குழுவை அமெரிக்க நிதித் திணைக்களம் விபரித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes