International21 August 2026

தமிழகத்தில் கடும் நிதி நெருக்கடி, ஏன் விஜய் வாகன வசதி குறித்த அறிவிப்பை விடுத்தார்!

தமிழக சட்டமன்றத்தில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் புதிய சிற்றுந்துகள் வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளதாகக் கூறப்படும் செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மாநிலம் கடுமையான நிதி நெருக்கடியிலும், கடன் சுமையிலும் தவிக்கும் சூழலில், 234 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு செலவில் சொகுசு வாகனங்கள் வாங்கித் தருவது எந்த வகையிலும் நியாயமில்லை என்று அரசியல் களத்திலும் சமூக வலைத்தளங்களிலும் கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற நிதி இல்லை என்று கூறிவிட்டு, மக்கள் வரிப்பணத்தை சட்டமன்ற உறுப்பினர்களின் வசதிக்காக விரயம் செய்வது முறையல்ல என்றும், சிற்றுந்து தேவையுள்ளவர்கள் தங்கள் சொந்த வேதனத்தில் அவற்றை பெற்றுக்கொள்ளலாமே என்ற விவாதங்களும் வலுப்பெற்று வருகின்றன.

இந்தநிலையில், கடுமையான விமர்சனங்களும் அதிருப்தி அலைகளும் முதல்வர் விஜய்யின் கவனத்திற்குச் சென்றுள்ளதாகவும், அரசின் வருவாயைப் பெருக்குவதற்கான உயர் மட்டக் குழுவினரிடம் ஆலோசிக்காமல் இந்த அறிவிப்பு வெளியானது குறித்து அவர் ஆழ்ந்த யோசனையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Related recommendation
Hiru TV News | Programmes