General05 September 2026

தலைமன்னார் கடற்பகுதியில் உள்ள மணல் திட்டு ஒன்றில் சிக்கியிருந்த மேலும் மூவரை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

தென்னிந்தியாவிலிருந்து இவர்கள் வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

மீட்கப்பட்ட மூவரில் ஒரு தந்தையும், 11 மற்றும் 13 வயதுடைய அவரது இரு பிள்ளைகளும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக, இன்று மணல் திட்டு ஒன்றில் நிர்க்கதியாக நின்ற 8 பேர் கடற்படையால் மீட்கப்பட்டனர்.

அந்த வகையில் இன்றைய நாளில் மொத்தம் 11 பேரை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட அனைவரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இவர்கள் தமிழகம் ஏதிலி முகாம்களில் தங்கியிருந்த இலங்கை எதிலிகள் என கூறப்படுகிறது.
Related recommendation
Hiru TV News | Programmes