ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, கையூட்டல், ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை அரசாங்கத்தால் ஜனநாயக நீரோட்டத்துக்கு எதிராக தொடுக்கப்பட்ட கடுமையான தாக்குதலாகும் என அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.
கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்தின் கையொப்பத்துடன் இன்று (5) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் 12ஆம் திகதி அநுராதபுரம் நகரில் நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த மாபெரும் மக்கள் பேரணியானது நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டு வந்ததாகவும், அந்தப் பேரணிக்கு கிடைத்து வந்த இமாலய மக்கள் ஆதரவைக் கண்டு அஞ்சிய அரசாங்கமே இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
முன்னதாக பல சந்தர்ப்பங்களில் காவல்துறைக்கும் நீதிமன்றத்துக்கும் முரணான வாக்குமூலங்களை வழங்கியவரும், குற்றவியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவருமான ஒருவரிடமிருந்து அவுஸ்திரேலியாவில் பெறப்பட்ட நம்பகத்தன்மையற்ற வாக்குமூலமே இந்தத் கைது நடவடிக்கைக்கு அடிப்படையாக அமைந்துள்ளது எனக் குறிப்பிடும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் முழுமையாக நிராகரிப்பதாகத் தெரிவித்துள்ளது.
தங்கள் ஆட்சிக் காலத்தில் ஊழல் எதிர்ப்புச் சட்டங்கள் இயற்றப்பட்டமை ஊழலை ஒழிப்பதற்காகவே தவிர, அரச நிறுவனங்களைத் துஷ்பிரயோகம் செய்து அரசியல் எதிரிகளை அடக்குவதற்காக அல்ல எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், ஒரு தலைவரைச் சிறையில் அடைத்தாலும் அவரது கொள்கையையும் மக்கள் பலத்தையும் ஒடுக்க முடியாது எனத் தெரிவித்துள்ள பொதுஜன பெரமுன, செப்டம்பர் 12ஆம் திகதி அநுராதபுரத்த்தில் நடத்தப்படவிருந்த மாபெரும் மக்கள் பேரணி திட்டமிட்டபடியே மிகவும் வலிமையுடன் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
எனவே அரசாங்கத்தின் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளுக்கு எதிராக அமைதியான முறையில் குரல்கொடுக்க செப்டம்பர் 12ஆம் திகதி அநுராதபுரத்தில் ஒன்று திரளுமாறு அந்த அறிக்கையின் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்தின் கையொப்பத்துடன் இன்று (5) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் 12ஆம் திகதி அநுராதபுரம் நகரில் நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த மாபெரும் மக்கள் பேரணியானது நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டு வந்ததாகவும், அந்தப் பேரணிக்கு கிடைத்து வந்த இமாலய மக்கள் ஆதரவைக் கண்டு அஞ்சிய அரசாங்கமே இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
முன்னதாக பல சந்தர்ப்பங்களில் காவல்துறைக்கும் நீதிமன்றத்துக்கும் முரணான வாக்குமூலங்களை வழங்கியவரும், குற்றவியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவருமான ஒருவரிடமிருந்து அவுஸ்திரேலியாவில் பெறப்பட்ட நம்பகத்தன்மையற்ற வாக்குமூலமே இந்தத் கைது நடவடிக்கைக்கு அடிப்படையாக அமைந்துள்ளது எனக் குறிப்பிடும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் முழுமையாக நிராகரிப்பதாகத் தெரிவித்துள்ளது.
தங்கள் ஆட்சிக் காலத்தில் ஊழல் எதிர்ப்புச் சட்டங்கள் இயற்றப்பட்டமை ஊழலை ஒழிப்பதற்காகவே தவிர, அரச நிறுவனங்களைத் துஷ்பிரயோகம் செய்து அரசியல் எதிரிகளை அடக்குவதற்காக அல்ல எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், ஒரு தலைவரைச் சிறையில் அடைத்தாலும் அவரது கொள்கையையும் மக்கள் பலத்தையும் ஒடுக்க முடியாது எனத் தெரிவித்துள்ள பொதுஜன பெரமுன, செப்டம்பர் 12ஆம் திகதி அநுராதபுரத்த்தில் நடத்தப்படவிருந்த மாபெரும் மக்கள் பேரணி திட்டமிட்டபடியே மிகவும் வலிமையுடன் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
எனவே அரசாங்கத்தின் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளுக்கு எதிராக அமைதியான முறையில் குரல்கொடுக்க செப்டம்பர் 12ஆம் திகதி அநுராதபுரத்தில் ஒன்று திரளுமாறு அந்த அறிக்கையின் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Latest News
மின் நுகர்வு குறைவு; மின் உற்பத்தி அதிகரிப்பு: மத்திய வங்கி தகவல்
Local
06 September 2026
Lanka Chairman's Business Excellence Awards 2026: 'ஹிரு' ஊடகக் குழுமம் பல விருதுகளை வென்று சாதனை!
Local
06 September 2026
துலீப் கிண்ணம் 2026 இறுதிப்போட்டி: முதல் நாளில் East Zone அணி வலுவான தொடக்கம்!
Local
06 September 2026
22 ஆவது திருத்தம் தொடர்பான தீர்மானம் கிடைத்ததும், விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றப்படும் - ஜனாதிபதி
Local
06 September 2026
துலீப் டிராபி 2026: சிராஜின் பந்துவீச்சை விளாசிய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி!
Local
06 September 2026
டெல்லியில் 6 மாடி கட்டடம் இடிந்து விபத்து: 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியிருக்கலாம் என அச்சம்
Local
06 September 2026
தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியால் வியந்த உலக நாடுகள் - அமைச்சர் லால்காந்த பெருமிதம்
Local
06 September 2026
உலகக் கிரிக்கெட்டுக்கு வைபவ் சூர்யவன்ஷி மிகப்பெரிய சொத்தாக இருப்பார்: முன்னாள் வீரர் பாராட்டு!
Local
06 September 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை விஜயம் - திகதிகள் அறிவிப்பு!
Local
06 September 2026
"குழந்தைகளை நான்தான் வளர்க்கிறேன்... ஆனால் அவர்?" : பதிவின் மூலம் ஆர்த்தி கொடுத்த மறைமுக பதிலடியா? பின்னணியில் உள்ள உண்மை!
Local
06 September 2026