வடக்கு, கிழக்கில் காணிகளை விரைவில் விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதி அறிவுறுத்தல்
யுத்த காலத்தில் பாதுகாப்புப் படையினரால் கையகப்படுத்தப்பட்டு, தற்போது விடுவிக்கக்கூடியவை என அடையாளம் காணப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள காணிகளை உடனடியாக விடுவித்து, சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கையளிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பாதுகாப்புப் பிரிவினருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்த காலத்தில் இராணுவ முகாம்களை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட தனியார் காணிகள் மற்றும் பொதுமக்களால் பயன்படுத்தப்பட்ட அரச காணிகளை மீண்டும் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கையளிப்பதை துரிதப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது.
இதன்போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
தேசிய பாதுகாப்பு மிகவும் முக்கியமானது எனத் தெரிவித்த ஜனாதிபதி, தேசிய பாதுகாப்பின் தேவைக்காக இராணுவ முகாம்கள் எங்கு அமைக்கப்பட வேண்டும் என்பதை தீர்மானிப்பது முப்படையினர், பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்புத் துறையினரின் பொறுப்பு எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில், எந்தக் காணிகளை விடுவிக்க முடியும், எந்தக் காணிகளை விடுவிக்க முடியாது என்பது தொடர்பில் இறுதித் தீர்மானத்தை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி பாதுகாப்புத் தரப்பினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், பாதுகாப்புத் தேவைகளுக்காக அவசியமான காணிகளின் அளவை தீர்மானிக்கும்போது, இயன்றவரை மக்களின் கோணத்தில் சிந்தித்து, விடுவிக்கக்கூடிய அதிகபட்ச காணிகளை மக்களிடம் மீளக் கையளிக்குமாறும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
அவ்வாறு காணிகள் மீள வழங்கப்படுவதுடன், அந்த மக்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கமைய, அதிக உற்பத்தித் திறனைப் பெற்றுக்கொள்ளக்கூடிய நவீன விவசாயத் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்தக் கலந்துரையாடலில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், பாதுகாப்புப் பிரதி அமைச்சர் அருண ஜயசேகர, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மக்கள் பிரதிநிதிகள், ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டி.பி. விக்ரமசிங்ஹ, காணி ஆணையாளர் நாயகம், முப்படைத் தளபதிகள் மற்றும் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மக்களின் காணி உரிமைகளை மீள நிலைநாட்டுவதுடன், தேசிய பாதுகாப்புத் தேவைகளையும் கருத்திற்கொண்டு காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
யுத்த காலத்தில் பாதுகாப்புப் படையினரால் கையகப்படுத்தப்பட்டு, தற்போது விடுவிக்கக்கூடியவை என அடையாளம் காணப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள காணிகளை உடனடியாக விடுவித்து, சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கையளிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பாதுகாப்புப் பிரிவினருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்த காலத்தில் இராணுவ முகாம்களை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட தனியார் காணிகள் மற்றும் பொதுமக்களால் பயன்படுத்தப்பட்ட அரச காணிகளை மீண்டும் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கையளிப்பதை துரிதப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது.
இதன்போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
தேசிய பாதுகாப்பு மிகவும் முக்கியமானது எனத் தெரிவித்த ஜனாதிபதி, தேசிய பாதுகாப்பின் தேவைக்காக இராணுவ முகாம்கள் எங்கு அமைக்கப்பட வேண்டும் என்பதை தீர்மானிப்பது முப்படையினர், பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்புத் துறையினரின் பொறுப்பு எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில், எந்தக் காணிகளை விடுவிக்க முடியும், எந்தக் காணிகளை விடுவிக்க முடியாது என்பது தொடர்பில் இறுதித் தீர்மானத்தை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி பாதுகாப்புத் தரப்பினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், பாதுகாப்புத் தேவைகளுக்காக அவசியமான காணிகளின் அளவை தீர்மானிக்கும்போது, இயன்றவரை மக்களின் கோணத்தில் சிந்தித்து, விடுவிக்கக்கூடிய அதிகபட்ச காணிகளை மக்களிடம் மீளக் கையளிக்குமாறும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
அவ்வாறு காணிகள் மீள வழங்கப்படுவதுடன், அந்த மக்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கமைய, அதிக உற்பத்தித் திறனைப் பெற்றுக்கொள்ளக்கூடிய நவீன விவசாயத் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்தக் கலந்துரையாடலில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், பாதுகாப்புப் பிரதி அமைச்சர் அருண ஜயசேகர, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மக்கள் பிரதிநிதிகள், ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டி.பி. விக்ரமசிங்ஹ, காணி ஆணையாளர் நாயகம், முப்படைத் தளபதிகள் மற்றும் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மக்களின் காணி உரிமைகளை மீள நிலைநாட்டுவதுடன், தேசிய பாதுகாப்புத் தேவைகளையும் கருத்திற்கொண்டு காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
Latest News
பங்களாதேஷ் - அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி : முதல் நாளில் 18 விக்கெட்டுகள் வீழ்ந்து பரபரப்பு!
Local
22 August 2026
காவல்துறை தடையகற்றல் சான்றிதழ் பெறுகின்ற இணையவழி சேவை மீண்டும் வழமைக்கு!
Local
22 August 2026
குழந்தைக்கு மருந்து கொடுப்பதில் தகராறு: சோகத்தில் முடிந்த மென்பொருள் பொறியாளரின் வாழ்க்கை
Local
22 August 2026
வங்கிக் கடனை செலுத்தாதவர்களின் பட்டியலை பகிரங்கப்படுத்த வேண்டும் – சாணக்கியன்
Local
22 August 2026
எதிர்கால மனைவி குறித்து முதல் முறையாக மனம் திறந்த ஜேசன் சஞ்சய்
Local
22 August 2026
தமிழ்நாட்டில் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியிடுவது நிறுத்தம்
Local
22 August 2026
போலி பன்னீர் விற்பனைக்கு கர்நாடகாவில் ஒராண்டு தடை!
Local
22 August 2026
சுகீஷ்வர பண்டார சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி!
Local
22 August 2026
விழாக்களில் கண்களைப் பாதுகாப்பது தொடர்பில் பொதுமக்களுக்கு விசேட அறிவுறுத்தல்!
Local
22 August 2026
எங்கும், எங்கெங்கும் தி.மு.க.வின் சாதனைகள்தான் – ஸ்டாலின் நெகிழ்ச்சி
Local
22 August 2026