International29 August 2026

ஒன்றாக சாப்பிடுங்கள்-மனச்சோர்வை விரட்டுங்கள்- ஆய்வுகளில் வெளியான முக்கிய தகவல்

உணவைப் பகிர்ந்துகொள்ளும் பழக்கம் (Commensality) மன அழுத்தம் மற்றும் டிமென்ஷியா (ஞாபக மறதி நோய்) அபாயத்தைக் குறைக்க உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தனியாக சாப்பிடுபவர்களை விட, மற்றவர்களுடன் இணைந்து சாப்பிடுபவர்களுக்கு மனச்சோர்வு (depression) ஏற்படும் ஆபத்து மிகக் குறைவு என்று சீன மற்றும் ஜப்பானிய ஆய்வுகள் காட்டுகின்றன.

உலக மகிழ்ச்சி அறிக்கையின் (World Happiness Report) படியும், அதிகமான வேளைகளில் உணவைப் பகிர்ந்துகொள்பவர்கள் உணர்ச்சி ரீதியான நல்வாழ்வில் அதிக மதிப்பெண்களைப் பெறுகின்றனர்.

2025-ஆம் ஆண்டில் ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், தனியாக சாப்பிடுபவர்களின் மூளையில் அறிவாற்றல் செயல்பாடு குறைந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

எனினும், கூட்டாகச் சாப்பிடுவது மூளையின் முதுமையைத் தடுத்து பாதுகாக்கிறது.

ஒன்றாகச் சாப்பிடுவது மனிதர்களுக்கு இடையே நம்பிக்கையையும் பிணைப்பையும் ஏற்படுத்துவதுடன், இயற்கையாகவே 'எண்டார்பின்' (endorphin) என்ற மகிழ்ச்சி ஹோர்மோனைத் தூண்டுகிறது.

இதேவேளை, இத்தாலி போன்ற நாடுகளில் குடும்பம் மற்றும் சமூகத்துடன் இணைந்து சாப்பிடும் கலாசாரம் மிக முக்கியமானதாகக் கருதப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

நவீன உலகில் தனிமையைத் தவிர்க்க, சக மனிதர்களை உணவுக்கு அழைக்கலாம் அல்லது 'Tablo' போன்ற செயலிகளைப் பயன்படுத்தியும் புதிய நண்பர்களை உருவாக்கிக் கொள்ளலாம் என்று ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes