வட மாகாண பாடசாலைகளில் 170 தகவல் தொழில்நுட்ப (ICT) ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது மொத்த ICT ஆசிரியர் பணியிடங்களில் சுமார் 31 சதவீத வெற்றிடமாக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக தீவகம், தென்மராட்சி மற்றும் மடு ஆகிய கல்வி வலயங்களில் 40 சதவீதத்துக்கும் அதிகமான ICT ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ICT ஆசிரியர் வெற்றிடங்கள் காரணமாக, பாடசாலைகளில் பழுதடையும் கணினிகள், ஸ்மார்ட் பலகைகள் மற்றும் மடிக்கணினிகளைப் பழுதுபார்ப்பதிலும், அவற்றுக்கான தொழில்நுட்ப மதிப்பீட்டு அறிக்கைகளை வழங்குவதிலும் பெருமளவு தாமதம் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்குப் பதிலளித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய, பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிவர்த்தி செய்வதற்காக 23,000 ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான பரீட்சைகள் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், நடப்பு ஆண்டுக்குள் ஆசிரியர் வெற்றிடங்களில் 50 சதவீதத்தை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் உறுதியளித்துள்ளார்.
இதனிடையே, பாடசாலைகளில் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள மின்னணு சாதனங்களை எரிப்பது அல்லது மண்ணில் புதைப்பது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அவற்றை முறையாக மறுசுழற்சி செய்வதற்கான நடைமுறையை அறிமுகப்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்குப் பதிலளித்த பிரதமர், மின்னணுக் கழிவுகளைப் பாதுகாப்பான முறையில் அகற்றுவதற்கான தெளிவான நடைமுறைகள் உருவாக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், டிஜிட்டல் பொருளாதார அமைச்சுடன் இணைந்து கல்வித்துறைக்கான புதிய வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
Latest News
துபாயில் இருந்து அழைத்து வரப்பட்ட 'கொண்ட ரஞ்சித்' கைது: குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அதிரடி!
Local
09 September 2026
மின்னல் மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை : பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல்!
Local
09 September 2026
அயல்நாடுகளை எப்போதுமே மாற்ற முடியாது - இந்திய அமைச்சர் கொழும்பில் கருத்து
Local
09 September 2026
கொழும்பில் முன்னிலைப் போதைப்பொருள் கடத்தல்காரரின் முக்கிய நண்பர்கள் 4 பேர் கைது!
Local
09 September 2026
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்க மாட்டார்
Local
09 September 2026
பெலன் டோர் (Ballon d'Or) விருதுக்கான ஆண்இ பெண் வீர வீராங்கனைகள் பரிந்துரை
Local
09 September 2026
ஈரானின் ஐந்து கப்பல்களை அழித்ததாக கூறும் அமெரிக்கா
Local
09 September 2026
10 ரஷ்ய தூதர அதிகாரிகளை வெளியேற்றியது ஹங்கேரி
Local
09 September 2026
ட்ரம்பும்-புடினும் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளனர்
Local
09 September 2026
சிங்கப்பூர் பிரதமருக்கு $1 மில்லியன் வேதன உயர்வு: தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை வழங்க தீர்மானம்!
Local
09 September 2026