General14 September 2026

புஷ்பிகாவின் கிரீடத்தைப் பறித்த விவகாரம்: கரோலின் ஜூரி, சூலா பத்மேந்திரன் விடுதலை!

கடந்த 2021 ஆம் ஆண்டு கொழும்பு தாமரை தடாக அரங்கில் நடைபெற்ற Mrs. Sri Lanka அழகிப் போட்டியின் இறுதிச் சுற்றில், வெற்றி பெற்ற புஷ்பிகா டி சில்வாவின் கிரீடத்தைப் பலவந்தமாக அகற்றி, அவர் மீது தாக்குதல் நடத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் Mrs. Sri Lanka கரோலின் ஜூரி மற்றும் ஆடை வடிவமைப்பு கலைஞர் சூலா பத்மேந்திரன் ஆகியோர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

நீண்ட வழக்கு விசாரணையின் பின்னர், கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரம இந்தத் தீர்ப்பை வழங்கினார்.

தீர்ப்பை அறிவித்த பிரதம நீதவான், சந்தேகநபர்களான இருவருக்கும் எதிராகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நியாயமான சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு நிரூபிக்க முறைப்பாட்டாளர் தரப்பு தவறியமையினால், இருவரையும் விடுவிப்பதாக உத்தரவிட்டார்.

இதேவேளை, இந்த வழக்கின் சந்தேகநபர்களில் ஒருவரான ஆடை வடிவமைப்பு கலைஞர் சூலா பத்மேந்திரன் தற்போது காலமாகிவிட்டதாக நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவருக்காக பிணையாளி இன்று மன்றில் முன்னிலையானார்.
Related recommendation
Hiru TV News | Programmes