Entertainment05 July 2026

ஆடை நிறுவனம் மீது அதிருப்தி வெளியிட்ட நடிகை த்ரிஷா – இன்ஸ்டாகிராம் ஸ்டோரி வைரல்!

தென்னிந்திய முன்னணி நடிகைகளில் ஒருவரான த்ரிஷா, பிரபல ஆடை நிறுவனம் ஒன்றின் சேவை குறித்து தனது அதிருப்தியை இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

40 வயதைக் கடந்த பின்னரும் தமிழ் மற்றும் தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாகத் தொடர்ந்து வெற்றிகரமாக வலம் வரும் த்ரிஷா, அண்மைக் காலமாக பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள திரைப்படங்கள் மூலம் கவனம் பெற்றுள்ளார்.

மேலும், அவரது புதிய திரைப்படமும் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பிரபல ஆடை நிறுவனமான Zara-வை குறியிட்டு (Tag) பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், "வீட்டிற்கு டெலிவரி செய்யப்பட்ட ஆடைகளில் உடல் நாற்றம் வீசுகிறது. இந்த துர்நாற்றம் மிகவும் மோசமாக உள்ளது. இது தொடர்ந்து மூன்றாவது முறையாக நடக்கிறது. மிகவும் அருவருப்பாக இருக்கிறது. குறைந்தபட்சம் பொதியிடுவதற்கு (Pack) முன் ஆடைகளைச் சரிபார்த்து அனுப்புங்கள்." என அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

த்ரிஷாவின் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வரும் நிலையில், ஆடை நிறுவனத்தின் தரக் கட்டுப்பாடு குறித்து பலரும் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

இதுவரை, இந்த விவகாரம் தொடர்பாக Zara நிறுவனம் எந்தவொரு உத்தியோகபூர்வ விளக்கத்தையும் வெளியிடவில்லை.
Related recommendation
Hiru TV News | Programmes