Entertainment16 July 2026

பணத்தின் மதிப்பு கூடுகிறது, உறவுகளின் மதிப்பு குறைகிறது - மனம் திறந்த ஜேசன் சஞ்சய்

தமிழக முதல்வரும் நடிகருமான விஜய்யின் மகனும், இயக்குநருமான ஜேசன் சஞ்சய், தான் முதன்முதலில் இயக்கியுள்ள "சிக்மா" திரைப்படம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

"நீர், நிலம், காற்று மற்றும் பணம் ஆகியவற்றின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அதேவேளையில், மனித உறவுகளின் மதிப்பு குறைந்து வருவது ஏன்? என்ற கேள்வியை அடிப்படையாகக் கொண்டே இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மற்றவர்கள் உங்களை நம்புகிறார்களோ இல்லையோ, உங்களை நீங்கள் முதலில் நம்புங்கள் என்பதுதான் இந்தப் படம் சொல்லும் பிரதான செய்தியாகும்" என்று குறிப்பிட்டார்.

சினிமா பின்னணி கொண்ட குடும்பத்தில் வளர்ந்ததால், சிறுவயது முதலே உலகத் திரைப்படங்களை ரசித்து வந்தமையே நான் ஒரு கதை இயக்குநராக உருவாவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

கனடாவில் சினிமா தயாரிப்பு தொடர்பான கற்கையை மேற்கொண்டபோது எழுதிய கதையை, தற்போது 'சிக்மா' திரைப்படமாக மாற்றியுள்ளேன்" எனத் தெரிவித்தார்.

நடிப்பு வாய்ப்பு குறித்து கருத்து வெளியிட்ட ஜேசன் சஞ்சய், இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் தன்னை நடிக்க அழைத்திருந்த போதிலும், அந்தச் சமயத்தில் தனக்கு இருந்த முதிர்ச்சியின்மை காரணமாக அதைத் தவிர்க்க நேரிட்டதாகக் குறிப்பிட்டார்.

"சிக்மா" திரைப்படம் வெளியான பின்னரே, தொடர்ந்து திரைப்படங்களை இயக்குவதா அல்லது நடிப்பில் கவனம் செலுத்துவதா என்பது குறித்து இறுதி முடிவை எடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes