Entertainment09 August 2026

"அம்மா பற்றி ஜேசன் சஞ்சய் சொன்ன அந்த ஒரு விடயம்..." - இணையத்தில் வைரலாகும் நேர்காணல்!

தான் எவ்வளவு வளர்ந்தாலும், தனது தாயார் இன்றும் தன்னை ஒரு குழந்தையாகவே பார்ப்பதாக முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற ஜேசன் சஞ்சய், தனது தாயார் குறித்துப் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

அப்போது அவர் கூறுகையில்,

“நான் எவ்வளவு வளர்ந்தாலும், என் அம்மா இன்றும் என்னை ஒரு குழந்தையாகவே பார்க்கிறார். தற்போது வேலை காரணமாக மிகவும் பிஸியாக இருப்பதால், முன்புபோல் அம்மாவுடன் அதிக நேரம் செலவிட முடியவில்லை.

இருப்பினும், அவர் தொடர்ந்து எனது நலனை விசாரிப்பதுடன், வேலையில் சோர்வடையும் நேரங்களில் என்னை ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்துவார்.

மேலும், சினிமா தொடர்பான விடயங்களில் என் அம்மாவின் கருத்துகளையும் விமர்சனங்களையும் நான் மிகவும் மதிக்கிறேன்.

எனது புதிய படத்தைப் பார்த்த பிறகு அவர் என்ன சொல்லப் போகிறார் என்பதை அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes