உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தங்களின் முழுமையான ஆதரவை வழங்குவதோடு, இந்த தாக்குதல்களின் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகள் மற்றும் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரையும் கண்டறிந்து நாட்டின் சட்டத்துக்கமைய நீதியைப் பெற்றுக்கொடுக்கத் தொடர்ந்து எதிர்பார்ப்பதாக கொழும்பு பேராயர் இல்லம் தெரிவித்துள்ளது.
பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்தின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி கோட்பாடுகளின்படி, மரண தண்டனையானது மனித கண்ணியத்தை மீறுவதாக அமைவதால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
திருச்சபையின் இந்தப் போதனையின் அடிப்படையில் மரண தண்டனை விதிக்கப்படுவதை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என பேராயர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை, இலங்கையின் நீதித்துறையின் சுதந்திரத்தின் மீது தமக்கு முழுமையான நம்பிக்கை உள்ளதாகவும், நீதித்துறை எடுக்கும் தீர்மானங்கள் அல்லது விசாரணைகளில் எந்தவொரு வகையிலும் தலையிட விரும்பவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளார்.
கத்தோலிக்க திருச்சபை பழிவாங்கலை விரும்புவதில்லை. "நபர்கள் எப்போதும் கசப்பான உணர்வுகளையும் தனிப்பட்ட பழிவாங்கல்களையும் கடந்து, மனப்பூர்வமாக மன்னிக்க அழைக்கப்படுகிறார்கள்; இருப்பினும், சிவில் சமூகமும் சட்ட அமைப்புகளும் நிறுவப்பட்ட நீதித்துறை மூலமாகப் பொது அமைதி, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை உறுதிப்படுத்த வேண்டும்" என்று திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், இவ்வாறான தீவிரவாதத் தாக்குதல்கள் வழிபாட்டுத் தலங்களிலோ அல்லது நாட்டின் வேறு எந்தவொரு பகுதியிலோ மீண்டும் இடம்பெறாத வகையில் தடுப்பதற்கு அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்களால் இயன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் வலியுறுத்தியுள்ளார்.
பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்தின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி கோட்பாடுகளின்படி, மரண தண்டனையானது மனித கண்ணியத்தை மீறுவதாக அமைவதால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
திருச்சபையின் இந்தப் போதனையின் அடிப்படையில் மரண தண்டனை விதிக்கப்படுவதை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என பேராயர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை, இலங்கையின் நீதித்துறையின் சுதந்திரத்தின் மீது தமக்கு முழுமையான நம்பிக்கை உள்ளதாகவும், நீதித்துறை எடுக்கும் தீர்மானங்கள் அல்லது விசாரணைகளில் எந்தவொரு வகையிலும் தலையிட விரும்பவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளார்.
கத்தோலிக்க திருச்சபை பழிவாங்கலை விரும்புவதில்லை. "நபர்கள் எப்போதும் கசப்பான உணர்வுகளையும் தனிப்பட்ட பழிவாங்கல்களையும் கடந்து, மனப்பூர்வமாக மன்னிக்க அழைக்கப்படுகிறார்கள்; இருப்பினும், சிவில் சமூகமும் சட்ட அமைப்புகளும் நிறுவப்பட்ட நீதித்துறை மூலமாகப் பொது அமைதி, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை உறுதிப்படுத்த வேண்டும்" என்று திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், இவ்வாறான தீவிரவாதத் தாக்குதல்கள் வழிபாட்டுத் தலங்களிலோ அல்லது நாட்டின் வேறு எந்தவொரு பகுதியிலோ மீண்டும் இடம்பெறாத வகையில் தடுப்பதற்கு அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்களால் இயன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் வலியுறுத்தியுள்ளார்.
Latest News
போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனையை அமுல்படுத்துவது குறித்து அரசாங்கத்தின் அவதானம்!
Local
10 August 2026
சாரதிகளுக்குத் திடீர் போதைப்பொருள் பரிசோதனை: புதிய நடமாடும் மருத்துவ பேருந்து கையளிப்பு!
Local
10 August 2026
பாதிக்கப்பட்டோருக்கு நீதி வேண்டும்; ஆனால் மரண தண்டனையை ஏற்க முடியாது – கர்தினால் மெல்கம் ரஞ்சித்!
Local
10 August 2026
கஞ்சிபானை இம்ரானின் சகா "இரத்மலானை சைமா" உட்பட மூவர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்!
Local
10 August 2026
‘சச்சின்’ படத்தில் விஜய்யிடம் "உங்க ஸ்மைல் கியூட்" எனப் பேசிய சிறுமி: வைரலாகும் தற்போதைய காணொளி!
Local
10 August 2026
வடக்கு , கிழக்கு மாகாண ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு முன்னுரிமை - பிரதமர் ஹரிணி அமரசூரிய உத்தரவு!
Local
10 August 2026
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த இஷாரா செவ்வந்தி, எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில்
Local
10 August 2026
கிழக்கு மாகாணத்தில் சிறுபோக நெல் அறுவடை நிறைவு
Local
10 August 2026
கேகாலையில் தாமதமாக வழங்கப்பட்ட வினாத்தாள்: இருவேறு கோணங்களில் விசாரணை!
Local
10 August 2026
அரசியல் பிரவேசத்திற்குத் தயாராகிறாரா நடிகர் தனுஷ்?
Local
10 August 2026