போதைப்பொருள் குற்றங்களுக்காக நீதிமன்றங்களால் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 4,962 கைதிகளில் 1,506 பேருக்கு தற்போது புனர்வாழ்வுத் திட்டங்கள் வழங்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு கூட்டத்தின் போதே அதிகாரிகள் இந்தத் தகவலை வெளியிட்டனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் நஜித் இந்திக தலைமையில் அண்மையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், சிறைச்சாலைகள் திணைக்களம், சமூக அடிப்படையிலான சீர்திருத்தங்கள் திணைக்களம், புனர்வாழ்வு பணியகம் மற்றும் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை ஆகியவற்றின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
நீதிமன்ற உத்தரவுகளின் கீழ் புனர்வாழ்வுக்கு பரிந்துரைக்கப்பட்ட கைதிகளுக்கும், தாமாக முன்வந்து புனர்வாழ்வைப் பெற விரும்பும் கைதிகளுக்கும் இந்தத் திட்டங்கள் வழங்கப்படுவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
வெவ்வேறு குற்றங்களுக்காகத் தண்டனை அனுபவித்து வரும் அனைத்துக் கைதிகளுக்கும் தற்போது புனர்வாழ்வு வாய்ப்புகளை வழங்க முடியாத நிலை காணப்படுவதாகச் சிறைச்சாலை அதிகாரிகள் இங்கு குறிப்பிட்டனர்.
இதேவேளை, போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கான புனர்வாழ்வுத் திட்டங்களை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்காகத் தேவையான பணியாளர்களை நியமிக்கவும், நாடளாவிய ரீதியில் பிரதேச செயலக மட்டத்தில் புனர்வாழ்வுத் திட்டங்களைப் பலப்படுத்தவும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
மேலும், புனர்வாழ்வு பெற்ற நபர்களுக்கான சமூக அங்கீகாரம் மற்றும் நற்சான்றிதழ்களைப் பெறுவதில் அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
புனர்வாழ்வுச் செயற்பாடுகளை மேலும் பயனுள்ளதாக்கவும், புனர்வாழ்வு பெற்ற நபர்கள் மீண்டும் சமூகத்தில் இணைவதை இலகுபடுத்தவும் தொடர்புடைய சட்டங்கள் மற்றும் விதிகளைத் திருத்த வேண்டியதன் அவசியத்தையும் குழுவின் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு கூட்டத்தின் போதே அதிகாரிகள் இந்தத் தகவலை வெளியிட்டனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் நஜித் இந்திக தலைமையில் அண்மையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், சிறைச்சாலைகள் திணைக்களம், சமூக அடிப்படையிலான சீர்திருத்தங்கள் திணைக்களம், புனர்வாழ்வு பணியகம் மற்றும் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை ஆகியவற்றின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
நீதிமன்ற உத்தரவுகளின் கீழ் புனர்வாழ்வுக்கு பரிந்துரைக்கப்பட்ட கைதிகளுக்கும், தாமாக முன்வந்து புனர்வாழ்வைப் பெற விரும்பும் கைதிகளுக்கும் இந்தத் திட்டங்கள் வழங்கப்படுவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
வெவ்வேறு குற்றங்களுக்காகத் தண்டனை அனுபவித்து வரும் அனைத்துக் கைதிகளுக்கும் தற்போது புனர்வாழ்வு வாய்ப்புகளை வழங்க முடியாத நிலை காணப்படுவதாகச் சிறைச்சாலை அதிகாரிகள் இங்கு குறிப்பிட்டனர்.
இதேவேளை, போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கான புனர்வாழ்வுத் திட்டங்களை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்காகத் தேவையான பணியாளர்களை நியமிக்கவும், நாடளாவிய ரீதியில் பிரதேச செயலக மட்டத்தில் புனர்வாழ்வுத் திட்டங்களைப் பலப்படுத்தவும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
மேலும், புனர்வாழ்வு பெற்ற நபர்களுக்கான சமூக அங்கீகாரம் மற்றும் நற்சான்றிதழ்களைப் பெறுவதில் அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
புனர்வாழ்வுச் செயற்பாடுகளை மேலும் பயனுள்ளதாக்கவும், புனர்வாழ்வு பெற்ற நபர்கள் மீண்டும் சமூகத்தில் இணைவதை இலகுபடுத்தவும் தொடர்புடைய சட்டங்கள் மற்றும் விதிகளைத் திருத்த வேண்டியதன் அவசியத்தையும் குழுவின் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
Latest News
இன்று இடியுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்பு : பொதுமக்கள் மற்றும் கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
Local
12 August 2026
இந்திய கிரிக்கட் துடுப்பாட்ட வீரர்களுக்கு இலங்கையின் ஃபர்வீஸ் மஹ்ரூஃப் விடுத்துள்ள எச்சரிக்கை!
Local
12 August 2026
இந்திய அணிக்குள் சிகையலங்கார நிபுணரான சிராஜ்!
Local
12 August 2026
ஏர் இந்தியா விமானிக்கு போதைப்பொருள் பரிசோதனையில் பாதக முடிவு: உறுதிப்படுத்தப்பட்ட அறிக்கை வெளியீடு
Local
12 August 2026
14 ஆவது ஆசிய வலைப்பந்து தொடர்: இந்தியாவை 100-34 என வீழ்த்தி இலங்கை அணி அரை இறுதிக்குத் தகுதி
Local
12 August 2026
தேவையற்ற தொலைபேசி விளம்பர அழைப்புகளுக்கு பிரான்ஸ் தடை
Local
12 August 2026
வட்டி வீதங்களை மேலும் உயர்த்த வேண்டிய அவசியமில்லை: இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தகவல்
Local
12 August 2026
கொழும்பு மெகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருள் கடத்தல்: சிறைச்சாலை அதிகாரி கைது
Local
12 August 2026
இலங்கைக்கான புதிய சீனத் தூதராக பதவியேற்கும் வேய் ஹ_வாசியாங்: இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த உறுதியேற்பு
Local
12 August 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் திட்டம்: சட்டத்தரணிகள் சங்கத்தின் முக்கிய கடிதம் வெளியானது
Local
12 August 2026