Sports09 August 2026

15 வயதா? 18 வயதா? - வைபவ் சூர்யவன்சி குறித்து பிரெட் லீ கருத்து!

இந்திய அணியின் இளம் அதிரடி துடுப்பாட்டக்காரர் வைபவ் சூர்யவன்சியின் (Vaibhav Sooryavanshi) உண்மையான வயது குறித்த சந்தேகங்கள் இந்தியாவிற்கு வெளியே இன்னமும் நீடிப்பதாக அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ (Brett Lee) தெரிவித்துள்ளார்.

இருப்பினும், அவரது வயது முக்கியமல்ல என்றும், அவரது திறமையே முதன்மையானது என்றும் அவர் பாராட்டியுள்ளார்.

அந்த நாட்டுத் தனியார் ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில் தனது கருத்துக்களைத் தெரிவித்த பிரெட் லீ, "இந்தியாவிற்கு வெளியே உள்ள பலரும் 'அவருக்கு உண்மையில் 15 வயதுதானா?' என்று என்னிடம் கேட்கிறார்கள். உலகளவில் தற்போது இதுவே பெரிய விவாதப் பொருளாக உள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

"அவருக்கு 15 வயதாக இருந்தால் மிகவும் மகிழ்ச்சி. ஒருவேளை 17 அல்லது 18 வயதாக இருந்தாலும் அதைப்பற்றி யாருக்கு என்ன கவலை? அந்தச் சிறுவனால் மிகச் சிறப்பாகக் கிரிக்கெட் விளையாட முடிகிறது, அதுவே முக்கியமானது" என்று பிரெட் லீ கூறியுள்ளார்.

அத்துடன், வைபவ் சூர்யவன்சி இந்திய கிரிக்கெட்டிற்குக் கிடைத்த மிகச்சிறந்த திறமைசாலி என்றும், அவர் மீது தேவையற்ற அழுத்தங்களைச் சுமத்தாமல், இயல்பாக விளையாட அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes