General11 April 2018

பல்கலைக்கழக கல்விசார ஊழியர்களுக்கு எச்சரிக்கை

போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற பல்கலைக்கழக கல்விசாரா பணியாளர்களுக்கு எதிர்வரும் 17ம் திகதி வரையில் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.

உயர்கல்வி அமைச்சு இதனை அறிவித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் 17ம் திகதிக்கு முன்னர் பணிக்கு திரும்பாதவர்கள், பணியில் இருந்து விலகியதாக கருதப்படுவர் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தற்காலிக, தகுதிகாண், ஒப்பந்தரீதியான, மேலதிக, நாளாந்த வேதனம் அடிப்படையிலான மற்றும் பயிற்சி அடிப்படையிலான அனைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களுக்கும் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், 17ம் திகதி பணிக்குத் திரும்பாத,நிரந்தர பணியாளர்கள், அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் காலம் வரையில் வேதனமற்ற காலமாக கணிக்கப்படும் என்றும் உயர்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes