எதிர்வரும் 08 ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கையின் மனித உரிமைகளின் நிலைமை தொடர்பான அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக இராணுவம் மற்றும் ஏனைய பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட கடுமையான மனித உரிமை மீறல்களை ஒப்புக்கொள்ள, இலங்கை அரசாங்கம் தவறிவிட்டதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதற்கமைய, உண்மை மற்றும் நீதியை எடுத்துக்காட்டுவதற்கு புதிய அரசாங்கத்திற்கு சிறந்த வாய்ப்பொன்று கிட்டியுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிடைத்துள்ள மக்கள் ஆணையின் பிரகாரம், புதிய அரசாங்கத்திற்கு இது வரலாற்றுச் சந்தர்ப்பமாக அமையும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
யுத்தக் காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் அவசியம் எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மனித உரிமை மீறல்களைத் தடுப்பதற்குத் தேவையான இறுக்கமான பொறிமுறைகள் அவசியம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மனித உரிமைகளைப் பாதுகாக்கும் பொறிமுறைகளை உறுதிப்படுத்துவதோடு, நீதிமன்றக் கட்டமைப்பினூடாக பாதுகாப்புத் துறைக்கான மறுசீரமைப்புகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் நாட்டில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளமையை குறித்த அறிக்கையூடாக வரவேற்கப்பட்டுள்ளதுடன், அந்த நிறுவனத்தின் செயற்பாடுகளை சர்வதேச கண்காணிப்பின் கீழ் மேற்பார்வை செய்ய வேண்டும் எனவும் ஐ.நா அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் தனது ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, ரோம் உடன்படிக்கையில் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திட வேண்டும் எனவும் குறித்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
Latest News
மோல்டோவா வேலைவாய்ப்பு மோசடி: பொதுமக்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அவசர எச்சரிக்கை
Local
30 January 2026
டிட்வா சூறாவளி நிவாரணம்: நஷ்டஈடு வழங்கும் பணிகள் இறுதி கட்டத்தில்
Local
30 January 2026
60 வீதமான போக்குவரத்து ஓட்டுநர்கள் போதைப்பொருளுக்கு அடிமை - அமைச்சர் பிமல் ரத்நாயக்க எச்சரிக்கை
Local
30 January 2026
நவீன தொழில்நுட்பத்துடன் கல்வித்துறையில் பாரிய மாற்றம் - பிரதமர் அறிவிப்பு
Local
30 January 2026
Grok AI மூலம் 30 இலட்சம் படங்கள் திருட்டு - ஈலோன் மஸ்க்கின் எக்ஸ் தளத்திற்கு தடை வருமா?
Local
30 January 2026
பிரதீப் ரங்கநாதனின் 'LIK' ரிலீஸ் எப்போது? : நீண்ட காத்திருப்புக்குப் பின் வெளியான தகவல்
Local
30 January 2026
தனது அரசாங்கத்தையே நீதிமன்றிற்கு இழுத்த ட்ரம்ப் : உலகையே வியக்க வைத்த அமெரிக்க ஜனாதிபதியின் முடிவு
Local
30 January 2026
தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுகிறதா? : தொழில்நுட்ப உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள வட்ஸ்அப் - ஈலோன் மஸ்க் மோதல்
Local
30 January 2026
78ஆவது சுதந்திர தினம்: கொழும்பில் இன்று முதல் விசேட போக்குவரத்துத் திட்டம்
Local
30 January 2026
2024 சாதாரண தரப் பரீட்சையில் தமிழ் மாணவர்களின் உரிமை மீறல் : மனித உரிமைகள் ஆணைக்குழு அதிரடித் தீர்ப்பு
Local
30 January 2026