General20 October 2025

நாளை பல தொடருந்து சேவைகள் ரத்து

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மலையக தொடருந்து மார்க்கத்தில் இன்று (20) கடுமையான போக்குவரத்து இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் நாளை தினம் (21) திட்டமிடப்பட்டிருந்த பல தொடருந்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. 
 
பலன மற்றும் இஹல, கோட்டை தொடருந்து நிலையங்களுக்கு இடையில், தொடருந்து மார்க்கத்தில் மண் மேடு சரிந்து வீழ்ந்துள்ளமை மற்றும் பாதைக்கு அருகில் இரண்டு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டமையாலும் தொடருந்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
 
மேலும் இஹல, கோட்டை தொடருந்து நிலையத்திற்கு அருகில் தொடருந்து ஒன்று தடம் புரண்டுள்ளமையால் குறித்த மார்க்கத்திற்கான தொடருந்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதன் காரணமாக, இன்று திட்டமிடப்பட்டிருந்த 18 தொடருந்து சேவைகளை ரத்து செய்துள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. 
 
மேலும் கண்டி ,மாத்தளையில் இருந்து கொழும்பு கோட்டை மற்றும் மாத்தறை வரை நாளை (21) காலை இயக்க திட்டமிடப்பட்டிருந்த 04 தொடருந்நு சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. 
 
அதன்படி, காலை 04.30 மணிக்கு இயக்கவிருந்த கண்டி - கொழும்பு கோட்டை தொடருந்து , காலை 04.50 மணிக்கு இயக்கவிருந்த மாத்தளை - கொழும்பு கோட்டை தொடருந்து, காலை 05.00 மணிக்கு இயக்கவிருந்த கண்டி - பெலியத்த தொடருந்து மற்றும் காலை 06.15 மணிக்கு இயக்கவிருந்த, கண்டி - கொழும்பு கோட்டை ஆகிய தொடருந்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
Related recommendation
Hiru TV News | Programmes