கடந்த ஞாயிற்றுக்கிழமை பாரிஸில் உள்ள உலகின் அதிகம் பார்வையிடப்படும் லூவர் அருங்காட்சியகத்தில் நடந்த நகைகள் திருட்டுச் சம்பவம் தொடர்பாக, இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அந்த நாட்டு நேரப்படி இரவு 10 மணியளவில் பாரிஸ்-சார்லஸ் டி கோல் விமான நிலையத்தில் வெளிநாடொன்றுக்கு செல்ல விமானத்தில் ஏறவிருந்த நிலையில் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
இரண்டாவதாக, சிறிது நேரத்திலேயே பாரிஸ் பிராந்தியத்தில் மற்றொரு நபர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கின் விசாரணையை, உயர்மட்ட கொள்ளைச் சம்பவங்களைக் கையாளும் BRB எனப்படும் பாரிஸ் காவல்துறையின் விசேட பிரிவு விசாரித்து வந்தது.
இந்தத் துணிகரத் திருட்டு, அருங்காட்சியகம் திறந்திருந்த நேரத்தில் நடந்தது.கொள்ளையர்கள் கிரேன் ஒன்றைய பயன்படுத்தி மாடியிலுள்ள ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்து, சுமார் பல மில்லியன் அமெரிக்க டொலர் என மதிப்பிடப்பட்ட எட்டு நகைகளைத் திருடிய பின்னர், உந்துருளிகளில் தப்பிச் சென்றனர்.
கொள்ளையர்கள் கட்டுமான தொழிலாளர்கள் பயன்படுத்தும் உடையில் இருந்ததோடு, ஒரு ஹைட்ராலிக் லிஃப்டைப் பயன்படுத்தித் தப்பிச் சென்றமை சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
திருடப்பட்ட நகைகள், பிரான்சின் ராணிகள் மற்றும் பேரரசிகளுக்குச் சொந்தமான, இரண்டு நூற்றாண்டுகால வரலாற்றைக் கொண்டவை என தெரிவிக்கப்படுகிறது.
இதில் பேரரசி யூஜெனிக்குச் சொந்தமான கிரீடம் மற்றும் முடி அலங்கார நகைகள், பேரரசி மேரி லூயிஸுக்கு திருமணப் பரிசாக வழங்கப்பட்ட நீலக்கற்கள் பதித்த அட்டிகை மற்றும் காதணிகள் ஆகியவை அடங்கும்.
இவற்றின் மதிப்பைவிட, இவற்றின் "பாரம்பரிய மதிப்பு விலைமதிப்பற்றது" என்று பிரான்ஸ் கலாசார அமைச்சு தெரிவித்துள்ளது.
அந்த நாட்டு நேரப்படி இரவு 10 மணியளவில் பாரிஸ்-சார்லஸ் டி கோல் விமான நிலையத்தில் வெளிநாடொன்றுக்கு செல்ல விமானத்தில் ஏறவிருந்த நிலையில் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
இரண்டாவதாக, சிறிது நேரத்திலேயே பாரிஸ் பிராந்தியத்தில் மற்றொரு நபர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கின் விசாரணையை, உயர்மட்ட கொள்ளைச் சம்பவங்களைக் கையாளும் BRB எனப்படும் பாரிஸ் காவல்துறையின் விசேட பிரிவு விசாரித்து வந்தது.
இந்தத் துணிகரத் திருட்டு, அருங்காட்சியகம் திறந்திருந்த நேரத்தில் நடந்தது.கொள்ளையர்கள் கிரேன் ஒன்றைய பயன்படுத்தி மாடியிலுள்ள ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்து, சுமார் பல மில்லியன் அமெரிக்க டொலர் என மதிப்பிடப்பட்ட எட்டு நகைகளைத் திருடிய பின்னர், உந்துருளிகளில் தப்பிச் சென்றனர்.
கொள்ளையர்கள் கட்டுமான தொழிலாளர்கள் பயன்படுத்தும் உடையில் இருந்ததோடு, ஒரு ஹைட்ராலிக் லிஃப்டைப் பயன்படுத்தித் தப்பிச் சென்றமை சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
திருடப்பட்ட நகைகள், பிரான்சின் ராணிகள் மற்றும் பேரரசிகளுக்குச் சொந்தமான, இரண்டு நூற்றாண்டுகால வரலாற்றைக் கொண்டவை என தெரிவிக்கப்படுகிறது.
இதில் பேரரசி யூஜெனிக்குச் சொந்தமான கிரீடம் மற்றும் முடி அலங்கார நகைகள், பேரரசி மேரி லூயிஸுக்கு திருமணப் பரிசாக வழங்கப்பட்ட நீலக்கற்கள் பதித்த அட்டிகை மற்றும் காதணிகள் ஆகியவை அடங்கும்.
இவற்றின் மதிப்பைவிட, இவற்றின் "பாரம்பரிய மதிப்பு விலைமதிப்பற்றது" என்று பிரான்ஸ் கலாசார அமைச்சு தெரிவித்துள்ளது.
Latest News
நாட்டின் தொழிலாளர் படை 8 மில்லியனைக் கடந்துள்ளது - நுவரெலியாவில் பெண்களின் பங்களிப்பு அதிகம்!
Local
21 September 2026
"நாட்டைவிட்டே தப்பியோட முயன்றவர்களுக்கு வினையான போலி ஆவணங்கள்": காவல்துறையிடம் சிக்கிய அதிநவீன மோசடி வலையமைப்பு!
Local
21 September 2026
தமிழகம் முழுவதும் கோலாகலமாக நிறைவடைந்த விநாயகர் சதுர்த்தி: பிரமாண்ட சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு!
Local
21 September 2026
உத்தேச 22வது திருத்தச் சட்டத்துக்கு எதிராக மக்கள் வீதிக்கு இறங்கிப் போராட வேண்டும்: சஜித் பிரேமதாச அழைப்பு!
Local
21 September 2026
கரீபியன் கடலில் அமெரிக்க இராணுவத்தின் வான் தாக்குதல்: போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் பலி!
Local
21 September 2026
இலங்கை மற்றும் சவூதி இடையே கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை!
Local
20 September 2026
வீட்டுக்கே சென்று சுகாதார சேவைகளை வழங்கும் புதிய முறைமை - காத்திருப்புப் பட்டியலைக் குறைக்க நடவடிக்கை! - ஜனாதிபதி
Local
20 September 2026
பாடசாலைகளை நடத்துவது குறித்துத் தீர்மானிக்க மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கு அதிகாரம்!
Local
20 September 2026
அதிகூடிய மழைவீழ்ச்சி நாவலப்பிட்டியில் பதிவு!
Local
20 September 2026
இந்த வருடத்தில் 121,000 பேருக்கு அரச தொழில் வாய்ப்பு : ஜனாதிபதி அறிவிப்பு
Local
20 September 2026