General30 November 2025

கட்டுநாயக்கவில் சிக்கியிருந்த 400 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்

பல நாட்களாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கி இந்தியாவுக்குப் பயணிக்க முடியாமல் தவித்த சுமார் 400 இந்தியர்கள், வெள்ள நிவாரண உதவிகளை ஏற்றி வந்த 2 விமானங்கள் மூலம் பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 
 
சுமார் 150 இந்தியப் பயணிகள் இன்று பிற்பகல் 02:30க்கு I.C.-130 விமானம் மூலம் இந்தியாவின் புதுடெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் 250 இந்தியப் பயணிகள் இன்று (30) மாலை 04:00 மணிக்கு I.L.-76 விமானம் மூலம் இந்தியாவின் திருவனந்தபுரத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். 
 
இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக விமானப் போக்குவரத்துகளுக்கு இடையூறு ஏற்பட்டது. 
 
இதன் காரணமாகக் குறித்த குழுவைச் சேர்ந்த இந்திய விமானப் பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes