அவுஸ்திரேலியாவில், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை, வரும் 10ஆம் திகதி முதல் அமுலுக்கு வருகிறது.
தடையை மீறும் நிறுவனங்களுக்கு, 297 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என, எச்சரிக்கப்பட்டு உள்ளது.
சமூக ஊடகங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், குழந்தைகளின் மனம், உடல்நலம் பாதிக்கப்படுவதாக அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் கவலை தெரிவித்தார்.
இதைத் தடுக்க, 'ஒன்லைன் பாதுகாப்பு திருத்தச் சட்டம் - 2024' என்ற சட்டத்தை அவர் கொண்டு வந்தார்.
இந்த சட்டத்தின்படி, 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள், 'பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டொக், எக்ஸ், யூடியூப், ஸ்னாப்சாட்' போன்ற சமூக ஊடகங்களில் கணக்குகளை ஆரம்பிக்கவோ, பயன்படுத்தவோ முடியாது.
இது, வரும் 10ஆம் திகதி முதல் அமுலுக்கு வருகிறது.
தடையை மீறும் நிறுவனங்களுக்கு, 297 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என அவுஸ்திரேலிய அரசாங்கம் எச்சரித்துள்ளது.
16 வயதுக்கு உட்பட்டவர்களின் சமூக ஊடக கணக்குகளை நீக்க, 'டிக்டொக், எக்ஸ், மெட்டா' ஆகிய நிறுவனங்களுக்கு உத்தரவிட்ட அவுஸ்திரேலிய அரசாங்கம், புதிய கணக்கு ஆரம்பிப்போரின் வயதைச் சரிபார்க்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கவும் அறிவுறுத்தியது.
இந்த சட்டத்தைப் பின்பற்றி, பிரான்ஸ், டென்மார்க், கிரீஸ், ருமேனியா, மலேஷியா உள்ளிட்ட நாடுகளும் சமூக ஊடகங்களை சிறுவர்கள் பயன்படுத்தத் தடை விதிக்க முடிவு செய்துள்ளன.
Latest News
தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் அதிரடி மாற்றம்!
Local
20 June 2026
அவுஸ்திரேலியாவை வீழ்த்தி அமெரிக்கா அபார வெற்றி!
Local
20 June 2026
நாட்டில் டெங்கு பரவல் தீவிரம்: ஜனாதிபதி செயலணியை உடனடியாக அமைக்குமாறு GMOA கோரிக்கை!
Local
20 June 2026
நெடுந்தீவில் இருந்து கடலுக்குச் சென்ற மீனவர் நாகபட்டினத்தில் உடலமாகக் மீட்பு: இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை!
Local
20 June 2026
காணாமல் ஆக்கப்பட்டோரின் வழக்குகளுக்கு விரைவில் முடிவு: அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார உறுதி!
Local
20 June 2026
சுங்கத்தில் காகிதப் பயன்பாட்டிற்கு முற்றுப்புள்ளி!
Local
19 June 2026
2025 சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின!
Local
19 June 2026
நீதி அமைச்சர் விஜயம் செய்த நாளில் செம்மணியில் மேலும் 7 என்புக்கூடுகள்!
Local
19 June 2026
துமிந்த திஸாநாயக்கவை மீண்டும் சந்தேகநபராக பெயரிட நீதிமன்றம் உத்தரவு!
Local
19 June 2026
பசிலுக்கான பிடியாணையை மீளப் பெறுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை நீதிமன்றினால் நிராகரிப்பு!
Local
19 June 2026