General04 August 2026

மெல்சிரிபுர வீதி விபத்தில் படுகாயமடைந்த 'ரந்தெனியா பண்டார' யானை உயிரிழப்பு!

கேகாலை, ரந்தெனிய பகுதியிலிருந்து மணம்பிட்டி பகுதியிலுள்ள விகாரையொன்றின் பெரஹராவுக்காக (ஊர்வலத்திற்காக) பாரவூர்தி மூலம் அழைத்துச் செல்லப்பட்டபோது, டிப்பர் ரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகி ஆறு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த 'ரந்தெனியா பண்டார' என்ற யானை இன்று (04)அதிகாலை உயிரிழந்துள்ளது.

கடந்த மாதம் 29ஆம் திகதி இந்த யானையை ஏற்றிச் சென்ற லொறி, மெல்சிரிபுர - ஓமரகொல்ல பகுதியில் இயந்திரக் கோளாறுக்கு உள்ளாகியிருந்தது.

அதன்போது யானைப் பாகனால் யானை லொறியிலிருந்து இறக்கப்பட்டு, எதிர் திசையில் அழைத்துச் செல்லப்பட்டபோதே பின்னால் வந்த டிப்பர் வாகனம் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, யானைக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சையளிக்கத் தொடங்கப்பட்டதோடு, மேலதிக சிகிச்சைக்காக யானையின் உரிமையாளர் அதனை கேகாலை, ரந்தெனிய பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes