அதிதீவிர வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களின் பின்னரான காலப்பகுதியில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கான சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
இதன்படி, நடமாடும் நீர் சுத்திகரிப்பு கட்டமைப்புகள் இரண்டை இலங்கை கடற்படை செயற்படுத்தி வருவதாக கடற்படை பேச்சாளர் கொமாண்டர் புத்திக சம்பத் தெரிவித்துள்ளார்.
பேரிடரின் பின்னரான நிலைமை தொடர்பான நடவடிக்கைகளின் பின்னூட்டம் தொடர்பில் தெளிவுப்படுத்தி, வெளியிடப்பட்ட காணொளியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கண்டி - தெல்தெனிய மற்றும் புத்தளம் - ஆராச்சிக்கட்டு ஆகிய பகுதிகளில் குறித்த நீர் சுத்திகரிப்பு கட்டமைப்புகள் செயற்படுத்தப்படுவதாகவும் கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.
அத்துடன் பொது இடங்களை சுத்திகரித்து, அவற்றை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கான செயற்பாடுகளில் கடற்படையின் தொழில்நுட்ப பிரிவு செயற்பட்டு வருகிறது.
இதேவேளை, அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகளும், நிவாரண செயற்பாடுகளும் கடற்படையினரால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதாக கடற்படை பேச்சாளர் கொமாண்டர் புத்திக சம்பத் தெரிவித்துள்ளார்.
Latest News
அனோஜன் விவகாரம்: சவூதி மன்னரிடம் கோரிக்கை விடுக்க ரிஷாத் முயற்சி; அலி சப்ரி, கலீலுர் ரஹ்மான் வலியுறுத்து!
Local
19 September 2026
மேற்கு யேமனில் ஹூதி அமைப்பினருக்கு ஆதரவாக பேரணி!
Local
19 September 2026
கிரீன்லாந்தின் மீது அமெரிக்காவின் நிரந்தரக் கட்டுப்பாடு: டொனால்ட் ட்ரம்ப் தகவல்!
Local
19 September 2026
வோஷிங்டன் போஸ்ட்' செய்தி முழுமையான பொய்: அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் சாடல்!
Local
19 September 2026
இலங்கையின் கிழக்கு மாகாணத்தை மேம்படுத்தும் நோக்கில் வெளிநாட்டு ராஜதந்திரிகளுக்கான சுற்றுலா ஆய்வுப் பயணம்!
Local
19 September 2026
யுக்ரைன், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அதிகாரிகளை குறிவைத்து ரஷ்யா ஆளில்லா வானூர்தி தாக்குதல்!
Local
19 September 2026
அமெரிக்க கால்பந்துப் போட்டியில் கனடா தேசிய கீதம்: எல்லை தாண்டிய பாசமும் வர்த்தகப் போரும்
Local
19 September 2026
அமெரிக்கா - ஹவுதி ரகசிய பேச்சுவார்த்தை: ஏமனில் தொடரும் பதற்றமும் புதிய பூகோள அரசியலும்!
Local
19 September 2026
அமெரிக்க வெள்ளை மாளிகையில் CNN மற்றும் சில ஊடகங்களுக்கு தடை: டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!
Local
19 September 2026
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கேக் பூசிய நண்பனுக்கு வந்த கதி: ஆத்திரத்தால் வந்த வினை!
Local
19 September 2026