அதிதீவிர வானிலையால் துண்டிக்கப்பட்ட மின்சார இணைப்புகளை வெகு விரைவில் மீள இணைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இதன்படி, சுமார் 39 இலட்சம் பயனாளர்களுக்கான மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டதாக இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் நொயெல் பிரியந்த குறிப்பிட்டுள்ளார்.
எனினும், 24 மணித்தியால தொடர் செயற்பாட்டின் ஊடாக சுமார் 88 வீதமான மின்சார விநியோகம் வழமைக்கு திருப்பப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
16,771 மின்பிறப்பாக்கிகள் பாதிப்படைந்த நிலையில், அவற்றில் பெரும்பாலானவை முழுமையாக வெள்ள நீரில் மூழ்கடிக்கப்பட்டதாகவும் இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மின்பிறப்பாக்கிகளில் 14,599 மின்பிறப்பாக்கிகளின் செயற்பாடுகள் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மின் இணைப்புகளின் திருத்தப் பணிகளில் ஈடுபட்ட ஊழியர் ஒருவர், ஹெட்டிபொல பகுதியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் நொயெல் பிரியந்த தெரிவித்துள்ளார்.
Latest News
தாய்லாந்திலிருந்து இலங்கை வந்த 3 பெண்கள் கைது : பல கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!
Local
20 September 2026
ஐரோப்பாவிலிருந்து படைகளைத் திரும்பப் பெற அமெரிக்கா திட்டம்: நேட்டோ நாடுகளுக்கு பேரதிர்ச்சி!
Local
20 September 2026
அச்சமடைய மாட்டோம்" - தென்சீனக் கடலில் சீனாவுக்கு எதிராக பிலிப்பைன்ஸ் கொந்தளிப்பு!
Local
20 September 2026
ஹோர்முஸ் நீரிணையில் ஈரானின் அதிரடி முடிவு: தரவு கேபிள்கள் அமைக்க இனி தெஹ்ரானின் அனுமதி கட்டாயம்!
Local
20 September 2026
முறைகேடுகள் மற்றும் தாமதங்களுக்கு முற்றுப்புள்ளி: புதிய வாட்ஸ்அப் சேவையைத் தொடங்கியது மோட்டார் போக்குவரத்து திணைக்களம்!
Local
20 September 2026
"அமைதியான காசாவாக" மாறும் கியூபா: அமெரிக்காவின் தடைகளால் உருக்குலைந்த மக்களின் இயல்பு வாழ்க்கை!
Local
20 September 2026
இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் திரைப்படம்: ஆஸ்கார் விருதுக்குத் தேர்வாகி மாஸ் சாதனை!
Local
20 September 2026
இங்கிலாந்து மண்ணில் இலங்கை பரிதாபம்: தொடரை 3-0 என கைப்பற்றி இங்கிலாந்து அதிரடி
Local
20 September 2026
"த.வெ.க. ஆட்சியில் மின்வெட்டுக்கும் அரிவாள் வெட்டுக்கும் இடையேதான் போட்டி" - மு.க.ஸ்டாலின் கடும் சாடல்!
Local
19 September 2026
கிரிக்கெட் தெரிவுக்குழு முன்னாள் தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்க ரூ. 75 மில்லியன் நட்டஈடு கோரி வழக்கு!
Local
19 September 2026