General08 December 2025

9 மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நிலவும் சீரற்ற வானிலையால் 9 மாவட்டங்களுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பதுளை, காலி, கம்பளை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பதுளை மாவட்டத்தின், ஊவா பரணகம, மீகாகியுல,பதுளை, கந்தெகெட்டிய, பண்டாரவளை, சொரணாத்தொட்ட, ஹாலி - எல, எல்ல, லுணுகலை, வெலிமடை, ஹப்புத்தளை, பசறை மற்றும் ஹல்துமுல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, ருவன்வெல்ல, தெரணியாகல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும்

நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ, ஹங்குராங்கெத்த, மதுரட்ட, நோர்வூட், கொத்மலை வடக்கு, நுவரெலியா, தலவாக்கலை, நில்தண்டாஹின்ன, வலப்பனை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும்,

இரத்தினபுரி மாவட்டத்தின் கஹவத்த, கொலன்ன, கொடக்காவெல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும்

குருநாகல் மாவட்டத்தின் அலவ்வ, பொல்கஹவெல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இரண்டாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டு;ள்ளது.

அதேநேரம், கண்டி மாவட்டத்தின் ஹத்தரலியத்த, யட்டிநுவர, உடுதும்பர, பாத்த ஹேவாஹெட்ட, மெததும்பர, பஸ்பாகே கோரள, தெல்தோட்டை, பூஜாப்பிட்டிய, கங்க இஹல கோரள, பன்வில, குண்டசாலை, மினிப்பே, தொலுவ, தும்பனே மற்றும் அக்குரண ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும்,

கேகாலை மாவட்டத்தின் கேகாலை, கலிகமுவ, மாவனெல்ல, புளத்கொஹுப்பிட்டிய, அரநாயக்க, யடியாந்தோட்டை, ரம்புக்கன்ன மற்றும் வரக்காபொல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும்

குருநாகல் மாவட்டத்தின் மாவத்தகம, மல்லவப்பிட்டிய மற்றும் ரிதீகம ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும்

மாத்தளை மாவட்டத்தின் நாவுல, வில்கமுவ, பல்லேபொல, அம்பன்கங்க கோரள, உக்குவளை, ரத்தோட்டை, மாத்தளை மற்றும் யடவத்த ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மூன்றாம் நிலை (சிவப்பு) மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes