General30 April 2026

மின்னல் தாக்கம் தொடர்பில் வெளியான எச்சரிக்கை

நாட்டின் சில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி சபரகமுவ, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும், வவுனியா, முல்லைத்தீவு, குருநாகல் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் பிற்பகல் வேளையில் இடிமின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இடிமின்னல் ஏற்படும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக ஓரிடத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் மேலதிக அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்வதற்கும், பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இடிமின்னல் ஏற்படும் போது மரங்களின் கீழ் தஞ்சம் புகுவதைத் தவிர்த்து, பாதுகாப்பான கட்டிடங்களுக்குள் இருக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மின்னல் செயற்பாடுகளின் போது மின்சாரத்துடன் இணைக்கப்பட்ட தொலைபேசிகள் மற்றும் மின் சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு திணைக்களம் எச்சரித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes