சர்வதேச தொழிலாளர் தினமான நாளைய தினம் நாட்டின் பிரதான எதிர்க்கட்சி உள்ளடங்கலான அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் தமது பலத்தை நிரூபிப்பதற்காக நாடளாவிய ரீதியில் மே தினப் பேரணிகளையும் கூட்டங்களையும் ஏற்பாடு செய்துள்ளன.
அந்த வகையில் நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் மேதினக்கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நாளை கொழும்பு மாளிகாவத்தை பீ.டி.சிறிசேன விளையாட்டு மைதானத்தில் பிற்பகல் 2.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
“உருட்டு பிரட்டு திருட்டு” என்னும் தொனிப்பொருளில் இந்த மேதினக்கூட்டம் இடம்பெறவுள்ளது. இம்முறை மேதின பேரணிகள் எதுவும் இடம்பெறாது என்பதுடன், கட்சியுடன் இணைந்த அனைத்து தொழிற்சங்கங்களும் பாரியளவில் இதில் பங்கேற்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
அத்துடன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) மேதினக்கூட்டத்தை நடத்தாது இருக்க தீர்மானித்துள்ளது. இருப்பினும் மேதின நிகழ்வுகளின் ஒரு அங்கமாக மறைந்த தலைவர் டீ.பீ.இலங்கரத்னவின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி, இம்முறை பிரம்மாண்டமான மே தினக் கூட்டங்களை நடத்தப்போவதில்லை என தீர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் தலதா அத்துக்கோரல உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
அதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம் கொழும்பு பொரளை கெம்பல் பார்க் மைதானத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.
“ஊழல் மிகு அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் அதிகாரம்” என்னும் தொனிப்பொருளில் ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபாவின் இல்லத்திற்கு அருகாமையில் இருந்து கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து பேரணியை நடத்தவுள்ளதுடன் அதனைத்தொடர்ந்து மேதினக்கூட்டத்தை நடத்தவுள்ளனர்.
மேலும் முன்னிலை சோசலிச கட்சியினர் "ஏகாதிபத்திய மிலேச்சத்தனத்திற்கு அடிபணிந்தாடும் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் அதிகாரம்" எனும் தொனிப்பொருளில் கொழும்பு ஹைட் மைதானத்தில் மே தினக்கூட்டத்தை நடத்தவுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜெயவீர தலைமையிலான சர்வஜன அதிகாரம் கட்சியினர் கொழும்பு-05, ஹென்றி பேதிரிஸ் மைதானத்தில் "அபிவிருத்தி அடையும் இலங்கைக்காக" எனும் தொனிப்பொருளில் விசேட மே தினக் கூட்டத்தை நடத்தவுள்ளனர்.
அதேவேளை சுயாதீன தொழிற்சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் அமைப்புகள் இணைந்து நடத்தும் பேரணி, பிற்பகல் 2.00 மணிக்கு லேக் ஹவுஸ் முன்பாக ஆரம்பமாகி ஏ.ஈ குணசிங்க மைதானத்தை சென்றடையவுள்ளது.
அத்துடன்,இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மேதினக்கூட்டத்தை பெருந்தோட்ட வாரியாக நடத்த தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.
மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியினர் தோட்டவாரியாக மேதின கூட்டங்களை நடத்தவுள்ளனர்.
மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியினர் தோட்டவாரியாக மேதின கூட்டங்களை நடத்தவுள்ளனர்.
அந்த வகையில் இம்முறை பிராதன எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உள்ளடங்கலான எதிரணியில் உள்ள முக்கிய கட்சிகள் மேதின பேரணியை இம்முறை நடத்தாதிருக்க தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Latest News
சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய ஒழுங்கு விதிகள்!
Local
30 April 2026
மஸ்கெலியா பிரதேச மருத்துவமனையில் உத்தியோகஸ்தர்கள் பணிப்பகிஷ்கரிப்பு: வெளிநோயாளர் பிரிவு ஸ்தம்பிதம்!
Local
30 April 2026
பாகிஸ்தானில் கடும் எரிபொருள் நெருக்கடி - இக்கட்டான நிலையில் அரசாங்கம்!
Local
30 April 2026
தடைகளைத் தகர்க்கும் ஈரானின் 'நிழல் கப்பற்படை': ஹோர்முஸ் நீரிணையில் நடத்திய அதிரடி புலனாய்வு!
Local
30 April 2026
சிறுவர் பராமரிப்பு நிலையங்களுக்கு புதிய இணையவழிப் பதிவு முறை - அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அதிரடி நடவடிக்கை!
Local
30 April 2026
மே தினப் பேரணிகளைத் தவிர்க்கும் முக்கிய கட்சிகள்: மக்கள் செல்வாக்கை நிரூபிக்கப் போவது யார்?
Local
30 April 2026
இலங்கை மாணவர்களுக்கு இந்திய அரசின் 'ஆயுஷ்' புலமைப்பரிசில் - விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது
Local
30 April 2026
நிதியமைச்சின் உதவிப் பணிப்பாளர் உயிரிழப்பு
Local
30 April 2026
ஆர்டெமிஸ் II விண்வெளி வீரர்கள் ட்ரம்ப்புடன் சந்திப்பு - விண்வெளி மற்றும் உலக அரசியல் குறித்து கலந்துரையாடல்
Local
30 April 2026
உண்மையில் விஜய்யின் தவெக 120 இடங்களில் வெல்லுமா? - இதற்குமுன் ஆக்சிஸ் மை இந்தியாவின் கணிப்புகள் எப்படி?
Local
30 April 2026