General30 April 2026

2.5 மில்லியன் டொலர் மாயம்: மே 5-இல் பாராளுமன்றத்தில் விசேட அறிக்கை!

காணாமல் போனதாகக் கூறப்படும் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் விவகாரம் தொடர்பாக, நிதியமைச்சு எதிர்வரும் மே மாதம் 5-ஆம் திகதி பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை சமர்ப்பிக்கவுள்ளது.

இந்த விசேட அறிக்கையை நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறித்த பண விவகாரம் தொடர்பில் நிதியமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரிடமும் அரசாங்க நிதி பற்றிய குழுவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
Related recommendation
Hiru TV News | Programmes