General30 April 2026

நாளை வானிலையில் இடம்பெறவுள்ள மாற்றம்

நாட்டின் சில பகுதிகளில் நாளை (01) வெப்பமான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, சபரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும் மொனராகலை மாவட்டம் ஆகிய பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி நாளை பகல் வேளையில், மனித உடலுக்கு உணரப்படும் வெப்பநிலையானது (Heat Index) சில இடங்களில் ‘அவதான நிலை’ (Caution Level) வரை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து சூரிய ஒளியில் இருப்பதும், வெளியில் வேலை செய்வதும் சோர்வை ஏற்படுத்தும் என்றும் திணைக்களம் எச்சரித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes